search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விருகம்பாக்கத்தில் என்ஜினீயரிங் மாணவர் விடுதி அறையில் தற்கொலை
    X

    விருகம்பாக்கத்தில் என்ஜினீயரிங் மாணவர் விடுதி அறையில் தற்கொலை

    • விடுதியில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர் ஒருவருக்கு இன்று பிறந்தநாள் ஆகும்.
    • போலீசார் சந்திரா ஒபுல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போரூர்:

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் நாகேந்திர ரெட்டி. இவரது மகன் சந்திரா ஒபுல் ரெட்டி (வயது21). மதுரவாயலில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் விருகம்பாக்கம் நியு காலனி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நண்பர்களுடன் தங்கி கல்லூரிக்கு சென்றுவந்தார்.

    அதே விடுதியில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர் ஒருவருக்கு இன்று பிறந்தநாள் ஆகும். இதையொட்டி விடுதியில் உள்ள மாணவர்கள் அனைவரும் நேற்று நள்ளிரவு விடுதி முன்பு கேக் வெட்டி கொண்டாடினர். இதில் கலந்து கொள்ள சந்திரா ஒபுல் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஒருவர் விடுதியின் 2-வது தளத்தில் உள்ள அறைக்கு சென்று பார்த்த போது சந்திரா ஒபுல் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் மற்றும் போலீசார் விரைந்து வந்து சந்திரா ஒபுல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×