search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேன் படிக்கட்டில் தொங்கிய பெண் போலீசை நிறுத்தாமல் இழுத்து சென்ற டிரைவர் கைது
    X

    வேன் படிக்கட்டில் தொங்கிய பெண் போலீசை நிறுத்தாமல் இழுத்து சென்ற டிரைவர் கைது

    • புதுப்பாக்கத்தில் இருந்து தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று திருப்போரூர் நோக்கி சென்றது.
    • வேனின் படிக்கட்டை பிடித்து பெண் போலீஸ் ஜீவா தொங்கிய நிலையில் இருந்தபோது டிரைவர் பெருமாள் வேனை நிறுத்தாமல் ஓட்டி அவரை இழுத்து சென்றார்.

    சென்னை:

    சென்னையை அடுத்த கானத்தூர் போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து பெண் போலீசாக வேலை பார்த்து வருபவர் ஜீவா (வயது 34).

    நேற்று முன்தினம் இரவு கேளம்பாக்கம் வீராணம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது பெண் போலீஸ் ஜீவா போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது புதுப்பாக்கத்தில் இருந்து தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று திருப்போரூர் நோக்கி சென்றது. இந்த வேனை மானாம்பதியை சேர்ந்த டிரைவர் பெருமாள் ஓட்டினார். அவர் குடிபோதையில் இருந்தார். போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்று கொண்டிருந்த வேன் டிரைவர் பெருமாள் தொடர்ச்சியாக ஹாரன் அடித்துள்ளார். இதனால் பெண் போலீஸ் ஜீவா வேன் டிரைவரை தட்டிக் கேட்டார். ஆனாலும் வேன் டிரைவர் பெருமாள் தொடர்ந்து ஹாரன் அடித்தார். அதை பெண் போலீஸ் ஜீவா கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வேன் டிரைவர் பெருமாள், பெண் போலீஸ் ஜீவா மீது மோதுவது போல் வேனை ஓட்டி அவர் மீது உரசியபடி சென்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் ஜீவா வேனுக்குள் ஏற முயன்றார். வேனின் படிக்கட்டை பிடித்து அவர் தொங்கிய நிலையில் இருந்தபோது டிரைவர் பெருமாள் வேனை நிறுத்தாமல் ஓட்டி பெண் போலீஸ் ஜீவாவை இழுத்து சென்றார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை வேனின் குறுக்கே நிறுத்தி பெண் போலீஸ் ஜீவாவை மீட்டனர்.

    பின்னர் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உட னடியாக அங்கு வந்தனர். காயம் அடைந்த பெண் போலீஸ் ஜீவாவை சிகிச்சைக்காக கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் பெருமாளை கைது செய்தனர். வேனையும் பறிமுதல் செய்து டிரைவர் பெருமாளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×