search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குடிநீர் வரி, கட்டணங்கள் ரொக்கமாக பெறப்பட மாட்டாது: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    குடிநீர் வரி, கட்டணங்கள் ரொக்கமாக பெறப்பட மாட்டாது: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

    • பணிமனை அலுவலகங்களில் தற்போது செயல்பட்டு வரும் மையங்கள் 1-ந்தேதி முதல் செயல்படாது.
    • குடிநீர் வாரியத்தின் கட்டண நுழைவாயிலை பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலமாக பணம் செலுத்தலாம்.

    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியத்திற்கு நுகர்வோர்கள் செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்கள், இணைப்பு கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்களை அக்டோபர் 1-ந்தேதி முதல் இ-சேவை மையங்கள் மற்றும் டிஜிட்டல், காசோலை, டி.டி. மட்டுமே செலுத்திட வேண்டும். ரொக்கமாக பெறப்பட மாட்டாது.

    அனைத்து பகுதி அலுவலகங்களில் செயல்பட்டு வரும் வசூல் மையங்கள் வழக்கம் போல் இயங்கும். மேலும் பணிமனை அலுவலகங்களில் தற்போது செயல்பட்டு வரும் மையங்கள் 1-ந்தேதி முதல் செயல்படாது. பொதுமக்கள் வசதிக்காக அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் பணிமனை அலுவலகங்களில் காசோலை, டி.டி. பெறுவதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

    குடிநீர் வாரியத்தின் கட்டண நுழைவாயிலை பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலமாக பணம் செலுத்தலாம். யூ.பி.ஐ. கியூஆர் குறியீடு மற்றும் Pos போன்ற கட்டண முறைகளை பயன்படுத்தி குடிநீர் கட்டணங்களை செலுத்தலாம் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×