search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆடி மாதத்தில் பக்தர்கள் பரவசம்- அம்மன் சிலையில் அமரும் கிளி
    X

    அம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் கிளி வட்டமிட்டு காட்டப்பட்டு உள்ளது.

    ஆடி மாதத்தில் பக்தர்கள் பரவசம்- அம்மன் சிலையில் அமரும் கிளி

    • கிளி மீது அம்மன் அமர்ந்து பூஜை செய்யும் காட்சி சுற்றுவட்டார பகுதி முழுவதும் பரவியது.
    • அம்மன் சிலை மீது கிளி அமர்ந்து பூக்களை பறித்து போட்டு வழிபடுவது பார்க்கவே பரவசமாக இருக்கிறது.

    நீலாம்பூர்:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே இருகூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாசாணியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதம் முழுவதும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    இந்த கோவிலுக்கு இருகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    நேற்று ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி கோவில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    வருடா வருடம் ஆடி மாதத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்போது, மாசாணியம்மன் மடி மற்றும் தலையில் கிளி ஒன்று வந்து அமர்வது வழக்கம்.

    இந்த ஆண்டும் அதேபோன்று கோவிலில் சுற்றி திரியும் கிளி நேற்றும் அம்மன் தலையில் அமர்ந்து கொண்டது. கிளி, அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த பூவை வாயினால் கிள்ளி போட்டது. இந்த காட்சியை பார்ப்பதற்கு அம்மன் மீது கிளி பூ தூவி வழிபாடு செய்வது போல் இருந்தது.

    இந்த காட்சியை பார்த்த பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் மாசாணியம்மன் வழிபட்டனர். கிளி மீது அம்மன் அமர்ந்து பூஜை செய்யும் காட்சி சுற்றுவட்டார பகுதி முழுவதும் பரவியது.

    இதையடுத்து இருகூர், நீலாம்பூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் கிளியை பார்ப்பதற்காகவும், அம்மனை தரிசிக்கவும் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    அம்மன் மீது அமர்ந்திருக்கும் கிளியை சிலர் துரத்தி பார்த்தனர். ஆனால் கிளி மீண்டும் அங்கேயே வந்து அமர்ந்தது. சத்தமாக சாமி பாடல்களை இசைக்கவிட்டும், பூஜை செய்தபோதும் நகராமல் அங்கேயே இருந்தது.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், அம்மன் சிலை மீது கிளி அமர்ந்து பூக்களை பறித்து போட்டு வழிபடுவது பார்க்கவே பரவசமாக இருக்கிறது. இந்த கிளியை பலமுறை கோவிலில் இருந்து துரத்தியுள்ளனர். ஆனால் எத்தனை முறை துரத்தினாலும் மீண்டும் மாசாணியம்மனை தேடி கோவிலுக்கு வந்து விடுகிறது என்றனர்.

    Next Story
    ×