search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தமிழகத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா- அதிபட்சமாக சென்னையில் 28 பேருக்கு பாதிப்பு

    தமிழகத்தில் 29 மாவட்டங்களில் நேற்று புதிதாக கொரோனா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை.
    சென்னை:

    தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை நேற்று வெளியிடப்பட்ட கொரோனா பாதிப்பு விவரம் வருமாறு;-

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 524 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 25 பேரும், பெண்கள் 19 பேரும் உள்பட மொத்தம்  44 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதில் அதிகபட்சமாக சென்னையில் 28 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 29 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

    கொரோனாவால் நேற்றும் ஒருவர் கூடகொரோனா பாதிப்பால் உயிரிழக்கவில்லை. 58 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×