என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நிலக்கரி தட்டுப்பாடு எதிரொலி- மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்
மேட்டூர்:
மேட்டூரில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகளுடன் பழைய அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மேட்டூரில் உள்ள பழைய அனல் மின் நிலையத்தில் 1 வது யூனிட்டில் மட்டுமே நேற்று மின்உற்பத்தி நடைபெற்றது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மற்ற யூனிட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு 4வது யூனிட்டில் மின் உற்பத்திக்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணி நள்ளிரவில் முடிவடைந்தது. இதையடுத்து இன்று காலை முதல் 4வது யூனிட்டில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 2 மற்றும் 3வது யூனிட்டில் மின் உற்பத்தி நடைபெறவில்லை. 840 மெகாவாட் திறன் கொண்ட பழயை அனல் மின் நிலையத்தில் தற்போது 420 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்படது.
மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்படுள்ளது. இதன்காரணமாக இந்த மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்வதை நிறுத்தபட்டு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் புதிய அனல் மின் நிலையத்தில் நடைபெற்று வந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்