என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
புதன்சந்தையில் மாடுகள் விலை உயர்வு
Byமாலை மலர்12 Jan 2022 6:15 AM GMT (Updated: 12 Jan 2022 6:15 AM GMT)
புதன்சந்தையில் மாடுகள் விலை அதிகரித்து காணப்பட்டது.
நாமக்கல்:
புதுச்சத்திரம் ஒன்றியம் புதன்சந்தையில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம். திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மதியம் வரை நடைபெறும்.
இச்சந்தையில் மாடுகளை வாங்க விற்க ஆந்திரா, கர்நாடகம், கேரளா, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் உள்ளூர் விவசாயிகள், வியாபாரிகள் வருவர். கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும்.
நேற்று கூடிய மாட்டுச்சந்தையில் சுற்றுப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். கேரளாவில் குளிர் காலத்தையொட்டி இறைச்சி நுகர்வு அதிகரித்துள்ளது. இதனால் கேரளாவிலிருந்து மாடுகளை வாங்க வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர்.
இதனால் விலை உயர்ந்தது இறைச்சி மாடுகள் ரூ. 25 ஆயிரத்திற்கும், கறவை மாடுகள் ரூ. 45ஆயிரத்திற்கும், கன்று குட்டிகள் ரூ. 12 ஆயிரத்திற்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 2 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X