என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கமுதி அருகே கர்ப்பிணி மனைவியுடன் ஓட்டல் தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்15 Oct 2021 4:40 AM GMT (Updated: 15 Oct 2021 4:40 AM GMT)
காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி 6 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கமுதி:
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கிளாமரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகையா. இவரது மகன் நாகராஜ் (வயது 27). அதே பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
இவரும், அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் தனலட்சுமியும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2 பேரும் அங்கேயே வாடைகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தனலட்சுமி கர்ப்பமானார். ஆனாலும் 2 பேரையும் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. மேலும் நாகராஜூக்கும் ஓட்டல் வேலை சரியாக கிடைக்கவில்லை. எனவே வருமானமின்றி குடும்பம் நடத்த நாகராஜ் சிரமப்பட்டதாக தெரிகிறது.
இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த காதல் தம்பதியினர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நாகராஜ், 6 மாத கர்ப்பிணி தனலட்சுமி ஆகியோர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். நேற்று வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கமுதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தபோது 2 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.
2 பேரின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கமுதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி 6 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கிளாமரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகையா. இவரது மகன் நாகராஜ் (வயது 27). அதே பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
இவரும், அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் தனலட்சுமியும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2 பேரும் அங்கேயே வாடைகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தனலட்சுமி கர்ப்பமானார். ஆனாலும் 2 பேரையும் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. மேலும் நாகராஜூக்கும் ஓட்டல் வேலை சரியாக கிடைக்கவில்லை. எனவே வருமானமின்றி குடும்பம் நடத்த நாகராஜ் சிரமப்பட்டதாக தெரிகிறது.
இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த காதல் தம்பதியினர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நாகராஜ், 6 மாத கர்ப்பிணி தனலட்சுமி ஆகியோர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். நேற்று வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கமுதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தபோது 2 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.
2 பேரின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கமுதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி 6 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X