search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆழியாறு அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறிய காட்சி.
    X
    ஆழியாறு அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறிய காட்சி.

    ஆழியாறு அணையில் இருந்து 11 மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு

    ஆழியாறு அணை தென்மேற்கு பருவமழையால் நிரம்பியதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
    பொள்ளாச்சி:

    பி.ஏ.பி. திட்டத்தில் முக்கிய அணைகளில் ஒன்றாக இருப்பது பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை. ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு 6400 ஏக்கர், புதிய ஆயக்கட்டு 44 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

    தென்மேற்கு பருவமழை காலங்களில் ஆழியாறு அணை நிரம்பிவிடும். இந்த ஆண்டு ஆழியாறு அணை தென்மேற்கு பருவமழையால் நிரம்பியதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

    ஆழியாறு அணையின் மொத்த உயரமான 120 அடி உயரத்தில் 119 அடிக்கு நீர் இருப்பு இருந்துவந்தது. இந்நிலையில் இன்று காலை அப்பர் ஆழியாறு அணையிலிருந்து நீர்வரத்து ஏற்பட்டதால் ஆழியாறு அணை பாதுகாப்பு கருதி மதகுகள் மற்றும் கால்வாய்கள் வழியாக 1,400 கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டது.

    அணையில் உள்ள 11 மதகுகளும் திறக்கப்பட்டு அதன் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறிச் சென்றது. தண்ணீர் திறப்பை கண்காணிப்புப் பொறியாளர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் லீலா, உதவி பொறியாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.


    Next Story
    ×