என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆழியாறு அணையில் இருந்து 11 மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு
Byமாலை மலர்15 Sep 2021 5:07 AM GMT (Updated: 15 Sep 2021 5:07 AM GMT)
ஆழியாறு அணை தென்மேற்கு பருவமழையால் நிரம்பியதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
பொள்ளாச்சி:
பி.ஏ.பி. திட்டத்தில் முக்கிய அணைகளில் ஒன்றாக இருப்பது பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை. ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு 6400 ஏக்கர், புதிய ஆயக்கட்டு 44 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.
தென்மேற்கு பருவமழை காலங்களில் ஆழியாறு அணை நிரம்பிவிடும். இந்த ஆண்டு ஆழியாறு அணை தென்மேற்கு பருவமழையால் நிரம்பியதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
ஆழியாறு அணையின் மொத்த உயரமான 120 அடி உயரத்தில் 119 அடிக்கு நீர் இருப்பு இருந்துவந்தது. இந்நிலையில் இன்று காலை அப்பர் ஆழியாறு அணையிலிருந்து நீர்வரத்து ஏற்பட்டதால் ஆழியாறு அணை பாதுகாப்பு கருதி மதகுகள் மற்றும் கால்வாய்கள் வழியாக 1,400 கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டது.
அணையில் உள்ள 11 மதகுகளும் திறக்கப்பட்டு அதன் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறிச் சென்றது. தண்ணீர் திறப்பை கண்காணிப்புப் பொறியாளர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் லீலா, உதவி பொறியாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
பி.ஏ.பி. திட்டத்தில் முக்கிய அணைகளில் ஒன்றாக இருப்பது பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை. ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு 6400 ஏக்கர், புதிய ஆயக்கட்டு 44 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.
தென்மேற்கு பருவமழை காலங்களில் ஆழியாறு அணை நிரம்பிவிடும். இந்த ஆண்டு ஆழியாறு அணை தென்மேற்கு பருவமழையால் நிரம்பியதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
ஆழியாறு அணையின் மொத்த உயரமான 120 அடி உயரத்தில் 119 அடிக்கு நீர் இருப்பு இருந்துவந்தது. இந்நிலையில் இன்று காலை அப்பர் ஆழியாறு அணையிலிருந்து நீர்வரத்து ஏற்பட்டதால் ஆழியாறு அணை பாதுகாப்பு கருதி மதகுகள் மற்றும் கால்வாய்கள் வழியாக 1,400 கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டது.
அணையில் உள்ள 11 மதகுகளும் திறக்கப்பட்டு அதன் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறிச் சென்றது. தண்ணீர் திறப்பை கண்காணிப்புப் பொறியாளர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் லீலா, உதவி பொறியாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X