என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
9 வயது மகன் தாலி எடுத்து கொடுத்து பேராசிரியைக்கு நடந்த 2-வது திருமணம்
Byமாலை மலர்12 Sep 2021 2:33 AM GMT (Updated: 12 Sep 2021 2:33 AM GMT)
9 வயது மகன் தாலி எடுத்துக்கொடுத்து பேராசிரியைக்கு மதுரை திருமங்கலத்தில் 2-வது திருமணம் நடந்தது.
மதுரை:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ஓவியர் ஆதீஷ். சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், தென்காசியை சேர்ந்த சுபாஷினிக்கும் நேற்று திருமங்கலத்தில் உள்ள பெருமாள் கோவிலில் திருமணம் நடந்தது. கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியையாக பணிபுரிந்து வரும் சுபாஷினிக்கு இது 2-வது திருமணம் ஆகும். அவர் முதல் கணவரை பிரிந்து விவாகரத்து பெற்றவர். இவருக்கு 9 வயதில் மகன் உள்ளான்.
திருமணத்தின்போது சுபாஷினியின் மகன் தாலியை எடுத்துக் கொடுக்க மணமகன் ஆதீஷ், சுபாஷினியின் கழுத்தில் கட்டினார். விழாவில் ஆதீஷ் மற்றும் சுபாஷினியின் நண்பர்கள், தோழிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் பெரியார் உருவபடத்தின் முன்பாக நின்று சுபாஷினியும், ஆதீசும் மாலை மாற்றிக் கொண்டனர்.
மகனின் கையால் தாலியை பெற்று அதை அவருடைய தாய் சுபாஷினியின் கழுத்தில் ஆதீஷ் கட்டிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த தம்பதிக்கு பலர் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ஓவியர் ஆதீஷ். சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், தென்காசியை சேர்ந்த சுபாஷினிக்கும் நேற்று திருமங்கலத்தில் உள்ள பெருமாள் கோவிலில் திருமணம் நடந்தது. கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியையாக பணிபுரிந்து வரும் சுபாஷினிக்கு இது 2-வது திருமணம் ஆகும். அவர் முதல் கணவரை பிரிந்து விவாகரத்து பெற்றவர். இவருக்கு 9 வயதில் மகன் உள்ளான்.
திருமணத்தின்போது சுபாஷினியின் மகன் தாலியை எடுத்துக் கொடுக்க மணமகன் ஆதீஷ், சுபாஷினியின் கழுத்தில் கட்டினார். விழாவில் ஆதீஷ் மற்றும் சுபாஷினியின் நண்பர்கள், தோழிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் பெரியார் உருவபடத்தின் முன்பாக நின்று சுபாஷினியும், ஆதீசும் மாலை மாற்றிக் கொண்டனர்.
மகனின் கையால் தாலியை பெற்று அதை அவருடைய தாய் சுபாஷினியின் கழுத்தில் ஆதீஷ் கட்டிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த தம்பதிக்கு பலர் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X