என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெட்ரோ ரெயில்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கம்
Byமாலை மலர்18 July 2021 2:36 AM GMT (Updated: 18 July 2021 2:36 AM GMT)
மெட்ரோ ரெயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
சென்னை:
சென்னை, மெட்ரோ ரெயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், வசதிக்காகவும் மெட்ரோ ரெயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணிக்கு பதிலாக கூடுதலாக ஒரு மணி நேரம் அதாவது இரவு 10 மணி வரை இயக்கப்படும் திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. மெட்ரோ ரெயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் பயணிகள் முக கவசம் அணியாவிட்டாலோ அல்லது முக கவசத்தை சரியாக அணியவில்லை என்றாலோ ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 21-ந் தேதியில் இருந்து தற்போது வரை 46 பயணிகளிடம் இருந்து ரூ.9 ஆயிரத்து 200 வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 21-ந் தேதியில் இருந்து கடந்த 15-ந் தேதி வரை 12 லட்சத்து 37 ஆயிரம் பயணிகள் ரெயிலில் பயணம் செய்து உள்ளனர். அதிகபட்சமாக கடந்த 16-ந் தேதி 69 ஆயிரத்து 794 பயணிகள் பயணம் செய்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X