என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தென்காசி அருகே போலீஸ்காரரை தாக்கிய டீ மாஸ்டர்
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்னக்கோவிலான் குளம் பகுதியில் வாலிபர் ஒருவர் குடிபோதையில் ரகளை செய்து வருவதாக போலீசாருக்கு புகார் சென்றது.
அதன்பேரில் ஏட்டு பாலகிருஷ்ணன் என்பவர் விசாரணைக்காக சென்றார். அவர் அப்பகுதி பொதுமக்களிடம் நடந்தவற்றை கேட்டுக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு குடிபோதையில் வந்த வாலிபர் ஏட்டு பாலகிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் போலீஸ்காரர் பாலகிருஷ்ணனை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு அவர் மீது சேற்றை அள்ளி வீசியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தார்.
இதுகுறித்து ஏட்டு, சின்னக்கோவிலான்குளம் போலீசில் புகார் செய்தார். விசாணையில் அந்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்த அசோகன் (27) என்பதும், சென்னையில் ஒரு கடையில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்தவர் என்பதும் கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது சொந்த ஊர் வந்திருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.
அசோகன், போலீஸ்காரருடன் தகராறில் ஈடுபட்ட காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்