என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறையில் கைதி அடித்து கொல்லப்பட்ட விவகாரம்- பாளை ஜெயில் சூப்பிரண்டு அதிரடி இடமாற்றம்
Byமாலை மலர்10 Jun 2021 10:16 AM GMT (Updated: 10 Jun 2021 10:16 AM GMT)
பாளை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளத்தை சேர்ந்தவர் முத்து மனோ (வயது 27).
வழக்கு ஒன்றில் கைதான இவரை கடந்த ஏப்ரல் மாதம் பாளை சிறையில் அடைக்க சென்ற போது சக கைதிகள் 7 பேர் முத்து மனோவை அடித்து கொன்றனர்.
இந்நிலையில் முத்து மனோவின் கொலைக்கு காரணமான சிறைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முத்து மனோவின் உடலை வாங்க மறுத்து இன்று 49-வது நாளாக அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே முத்து மனோ கொலை செய்யப்பட்ட அன்றைய தினம் பணியில் இருந்த ஜெயிலர், உதவி ஜெயிலர் உள்பட 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று பாளை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக திருச்சி சிறை கண்காணிப்பாளர் சங்கர் பாளை மத்திய சிறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
மேலும் ஜெயிலராக பணியாற்றிய பரசுராமன் மதுரை மத்திய சிறைக்கும், மதுரை மத்திய சிறை ஜெயிலர் வசந்த கண்ணன் பாளை மத்திய சிறைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளத்தை சேர்ந்தவர் முத்து மனோ (வயது 27).
வழக்கு ஒன்றில் கைதான இவரை கடந்த ஏப்ரல் மாதம் பாளை சிறையில் அடைக்க சென்ற போது சக கைதிகள் 7 பேர் முத்து மனோவை அடித்து கொன்றனர்.
இந்நிலையில் முத்து மனோவின் கொலைக்கு காரணமான சிறைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முத்து மனோவின் உடலை வாங்க மறுத்து இன்று 49-வது நாளாக அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே முத்து மனோ கொலை செய்யப்பட்ட அன்றைய தினம் பணியில் இருந்த ஜெயிலர், உதவி ஜெயிலர் உள்பட 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று பாளை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக திருச்சி சிறை கண்காணிப்பாளர் சங்கர் பாளை மத்திய சிறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
மேலும் ஜெயிலராக பணியாற்றிய பரசுராமன் மதுரை மத்திய சிறைக்கும், மதுரை மத்திய சிறை ஜெயிலர் வசந்த கண்ணன் பாளை மத்திய சிறைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X