search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தாரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

    தாரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி சின்னபிள்ளையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பெருமாள் (வயது 56). இவர் நேற்று மாலை சின்னப்பம்பட்டியில் இருந்து இளம்பிள்ளை நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்தார். 

    அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பெருமாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×