என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குளித்தலை அருகே கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்6 April 2021 9:01 AM GMT (Updated: 6 April 2021 9:29 AM GMT)
குளித்தலை அருகே கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:
லாலாபேட்டை அருகே உள்ள சிந்தலவாடி பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 42). இவர் மலேசியாவில் பல வருடங்களாக கட்டிட கட்டுமான சென்டிரிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் கடந்த ஒரு வருடமாக திருச்சி மாவட்டம் அல்லூர் பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கி வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், சங்கர் குளித்தலை சங்கிலிராயன் கோவில் தெருவில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளார்.
சம்பவத்தன்று சங்கருக்கு வயிற்றுவலி அதிகமாக இருந்ததால் விஷ மருந்தை குடித்துள்ளார். இதனால் ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் கடந்த 2-ந்தேதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X