என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புத்துணர்வு முகாமில் யானைகளுக்கு தினந்தோறும் 7 டன் பசுந்தீவனங்கள்
Byமாலை மலர்13 Feb 2021 5:21 AM GMT (Updated: 13 Feb 2021 5:21 AM GMT)
புத்துணர்வு முகாமில் யானைகளுக்கு சமச்சீர் உணவு மற்றும் கூந்தல் பனை, சோளத்தட்டு, பசும்புல் கரும்பு, தென்னை மட்டை உள்ளிட்ட பசுந்தீவனங்கள் வழங்கப்படுகின்றன.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் புத்துணர்வு சிறப்பு நலவாழ்வு முகாம் நடந்து வருகிறது.
முகாமில் 26 யானைகள் கலந்துகொண்டு புத்துணர்வு பெற்று வருகின்றன. யானைகளுக்கு காலை, மாலை என 2 வேளையும் நடைபயிற்சி, ஆற்றின் கரையோரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குளியல் மேடை, ஷவர் மேடைகளில் ஆனந்தக் குளியல் பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்படுகிறது.
அதன் பின்னர் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சமச்சீர் உணவு மற்றும் கூந்தல் பனை, சோளத்தட்டு, பசும்புல் கரும்பு, தென்னை மட்டை உள்ளிட்ட பசுந்தீவனங்கள் வழங்கப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து கூந்தல் பனை, சத்தியமங்கலம், அந்தியூர், அத்தாணி, கோபி ஆகிய பகுதிகளிலிருந்து பசும்புல், சோளத்தட்டு, தென்னைமட்டை, மதுரையிலிருந்து கரும்பு உள்பட 7 டன் பசுந்தீவனங்கள் தினமும் வரவழைக்கப்படுகிறது. முகாமில் உள்ள யானைகள் அனைத்தும் கூந்தல் பனையை அதிகளவில் விரும்பி சாப்பிடுகின்றன. அதற்கு அடுத்தபடியாக சோளத்தட்டை உண்பதில் அதிகம் விருப்பம் காட்டுகின்றன.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் புத்துணர்வு சிறப்பு நலவாழ்வு முகாம் நடந்து வருகிறது.
முகாமில் 26 யானைகள் கலந்துகொண்டு புத்துணர்வு பெற்று வருகின்றன. யானைகளுக்கு காலை, மாலை என 2 வேளையும் நடைபயிற்சி, ஆற்றின் கரையோரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குளியல் மேடை, ஷவர் மேடைகளில் ஆனந்தக் குளியல் பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்படுகிறது.
அதன் பின்னர் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சமச்சீர் உணவு மற்றும் கூந்தல் பனை, சோளத்தட்டு, பசும்புல் கரும்பு, தென்னை மட்டை உள்ளிட்ட பசுந்தீவனங்கள் வழங்கப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து கூந்தல் பனை, சத்தியமங்கலம், அந்தியூர், அத்தாணி, கோபி ஆகிய பகுதிகளிலிருந்து பசும்புல், சோளத்தட்டு, தென்னைமட்டை, மதுரையிலிருந்து கரும்பு உள்பட 7 டன் பசுந்தீவனங்கள் தினமும் வரவழைக்கப்படுகிறது. முகாமில் உள்ள யானைகள் அனைத்தும் கூந்தல் பனையை அதிகளவில் விரும்பி சாப்பிடுகின்றன. அதற்கு அடுத்தபடியாக சோளத்தட்டை உண்பதில் அதிகம் விருப்பம் காட்டுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X