என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சிபுரம் அரசு அதிகாரி வீட்டில் ரூ.85 லட்சம் சொத்து ஆவணங்கள் சிக்கின
Byமாலை மலர்1 Feb 2021 2:11 AM GMT (Updated: 1 Feb 2021 2:11 AM GMT)
அரக்கோணத்தில் உள்ள காஞ்சிபுரம் அரசு அதிகாரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.85 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை கைப்பற்றினர்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், ரத்தன்சந்த் நகரை சேர்ந்தவர் கோபி, இவர் காஞ்சிபுரத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் தணிக்கை பிரிவில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்து வைத்து இருப்பதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று முன்தினம் காலை கோபியின் வீட்டுக்கு சென்றனர். அங்கு கோபி வீட்டில் இருந்தார். வீட்டுக்குள் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அவருடைய வீடு முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தினர்.
மதியம் வரை நடத்திய சோதனையில் 6 வங்கி கணக்கு புத்தகங்கள், ரூ.85 லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ரூ.50 லட்சம் மதிப்பிலான 10 இதர ஆவணங்களை கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீசார் தங்கள் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் விசாரணைக்கு வரும்படி கோபியை அழைத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், ரத்தன்சந்த் நகரை சேர்ந்தவர் கோபி, இவர் காஞ்சிபுரத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் தணிக்கை பிரிவில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்து வைத்து இருப்பதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று முன்தினம் காலை கோபியின் வீட்டுக்கு சென்றனர். அங்கு கோபி வீட்டில் இருந்தார். வீட்டுக்குள் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அவருடைய வீடு முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தினர்.
மதியம் வரை நடத்திய சோதனையில் 6 வங்கி கணக்கு புத்தகங்கள், ரூ.85 லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ரூ.50 லட்சம் மதிப்பிலான 10 இதர ஆவணங்களை கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீசார் தங்கள் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் விசாரணைக்கு வரும்படி கோபியை அழைத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X