என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கன்னியாகுமரி அருகே மீனவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் - 4 மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம்
கன்னியாகுமரி:
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தில் மீனவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
கோவளம் தூய இன்னாசியார் ஆலயம் முன்பு இன்று காலை இப்போராட்டம் நடந்தது.
கன்னியாகுமரி மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கோவளம் கிளை தலைவர் தனேஷ் தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்க தலைவர் அலெக்சாண்டர், அகஸ் தீஸ்வரம் வட்டார குழு தலைவர் ஜேம்ஸ் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அகமது உசேன், மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காலை 10.15 மணிக்கு தொடங்கிய இந்த கறுப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டம் 11 மணி வரை நடந்தது இந்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்