search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரெவி புயல்
    X
    புரெவி புயல்

    திருகோணமலை அருகே கரையை கடந்தது புரெவி புயல்

    புரெவி புயல் திருகோணமலை அருகே தற்போது கரையை கடந்தது. புயல் இன்று பாம்பன் அருகே கரையை கடக்கிறது.
    சென்னை:

    வங்கக்கடலில் உருவான புரெவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் புரெவி புயல் திருகோணமலையில் கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,

    இலங்கையின் திருகோணமலைக்கு வடக்கே புரெவி புயல் கரையை கடந்தது. 

    புயல் கரையை கடந்து வரும் நிலையில் 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது.

    திருகோணமலைக்கு வடக்கே கரையை கடந்துள்ள நிவர் புயல் இன்று பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது.

    பாம்பன் - கன்னியாகுமரிக்கு இடையே இன்று (3-ம் தேதி) நள்ளிரவு முதல் நாளை (4-ம் தேதி) அதிகாலை வரை புரெவி புயல் கரையை கடக்கிறது.

    Next Story
    ×