என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழனி முருகன் கோவிலில் மின்இழுவை ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்
Byமாலை மலர்2 Dec 2020 2:09 AM GMT (Updated: 2 Dec 2020 2:09 AM GMT)
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பழனி முருகன் கோவிலில் நிறுத்தப்பட்ட மின்இழுவை ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது.
பழனி:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பழனி முருகன் கோவிலில் மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகிய சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்தநிலையில் மின்இழுவை ரெயில் சேவை நேற்று முதல் தொடங்கியது. 50 சதவீத பயணிகளுடன் மின்இழுவை ரெயில் இயக்கப்பட்டது. முன்னதாக நேற்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மின்இழுவை ரெயில் சேவை தொடங்கியது. இந்த ரெயிலில் பக்தர்கள் பயணம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். முக கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
மின்இழுவை ரெயிலில் செல்வதற்கு, 15 நிமிடங்களுக்கு முன்பு காத்திருப்பு மண்டபத்துக்கு பக்தர்கள் வர வேண்டும்.
அங்கு பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். இதில் கொரோனா அறிகுறியற்ற நபர்கள் மட்டுமே, மின்இழுவை ரெயிலில் பயணம் செய்ய முடியும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பழனி முருகன் கோவிலில் மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகிய சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்தநிலையில் மின்இழுவை ரெயில் சேவை நேற்று முதல் தொடங்கியது. 50 சதவீத பயணிகளுடன் மின்இழுவை ரெயில் இயக்கப்பட்டது. முன்னதாக நேற்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மின்இழுவை ரெயில் சேவை தொடங்கியது. இந்த ரெயிலில் பக்தர்கள் பயணம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். முக கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
மின்இழுவை ரெயிலில் செல்வதற்கு, 15 நிமிடங்களுக்கு முன்பு காத்திருப்பு மண்டபத்துக்கு பக்தர்கள் வர வேண்டும்.
அங்கு பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். இதில் கொரோனா அறிகுறியற்ற நபர்கள் மட்டுமே, மின்இழுவை ரெயிலில் பயணம் செய்ய முடியும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X