search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மஞ்சளார் அணை
    X
    மஞ்சளார் அணை

    மஞ்சளார் அணை முழு கொள்ளளவை எட்டியது - பாசனத்திற்கு 100 கனஅடி வீதம் நீர் திறப்பு

    வடகிழக்கு பருவமழையின் காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையில் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியது.
    பெரியகுளம்:

    வடகிழக்கு பருவமழையின் காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையில் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியது.

    இந்நிலையில் பாசனத்திற்கு அணையிலிருந்து 100 கனஅடி வீதம் இன்று முதல் 107 நாட்களுக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் பாசனத்திற்கான நீரை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் திறந்து வைத்தார். இதனால்,  தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
    Next Story
    ×