என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட பெண் யானை காப்புக்காட்டில் விடப்பட்டது
Byமாலை மலர்21 Nov 2020 2:19 AM GMT (Updated: 21 Nov 2020 2:19 AM GMT)
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட பெண் யானை காப்புக்காட்டில் விடப்பட்டது
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே ஏழு குண்டூர் கிராமத்தில் ஒரு தோட்டத்தில் உள்ள 50 அடி ஆழ கிணற்றில் நேற்று முன்தினம் ஒரு பெண் யானை தவறி விழுந்தது. 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நேற்று முன்தினம் இரவு கிணற்றில் இருந்து யானை உயிருடன் மீட்கப்பட்டது. இந்த யானையை தர்மபுரி மாவட்ட கலெக்டர் கார்த்திகா மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். அந்த பெண் யானைக்கு குறிப்பிடத்தக்க பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. சிறிது நேரம் சோர்வாக இருந்த யானையின் உடல்நிலை சீரான பின்னர் உணவு தின்றது. தண்ணீரையும் குடித்தது. அந்த யானையை மாரண்டஅள்ளி பகுதியிலுள்ள காப்புக்காட்டில் பாதுகாப்பாக விட வனத்துறை குழுவினருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து யானையை லாரியில் ஏற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கு யானை ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதையடுத்து வனத்துறை குழுவினர் அந்த யானையை அடர்ந்த காட்டு பகுதியை நோக்கி மெதுவாக விரட்டினார்கள். நேற்று அதிகாலையில் அந்த யானை மாரண்டஅள்ளி காப்புக் காட்டுக்குள் சென்றது. நேற்று பகலில் மாரண்டஅள்ளி காப்புக்காடு பகுதியில் அந்த யானை தனியாக நடமாடியது. வனத்துறையை சேர்ந்த 10 பேர் கொண்ட வனக்குழுவினர் காப்புக்காடு பகுதியில் முகாமிட்டு யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே ஏழு குண்டூர் கிராமத்தில் ஒரு தோட்டத்தில் உள்ள 50 அடி ஆழ கிணற்றில் நேற்று முன்தினம் ஒரு பெண் யானை தவறி விழுந்தது. 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நேற்று முன்தினம் இரவு கிணற்றில் இருந்து யானை உயிருடன் மீட்கப்பட்டது. இந்த யானையை தர்மபுரி மாவட்ட கலெக்டர் கார்த்திகா மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். அந்த பெண் யானைக்கு குறிப்பிடத்தக்க பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. சிறிது நேரம் சோர்வாக இருந்த யானையின் உடல்நிலை சீரான பின்னர் உணவு தின்றது. தண்ணீரையும் குடித்தது. அந்த யானையை மாரண்டஅள்ளி பகுதியிலுள்ள காப்புக்காட்டில் பாதுகாப்பாக விட வனத்துறை குழுவினருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து யானையை லாரியில் ஏற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கு யானை ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதையடுத்து வனத்துறை குழுவினர் அந்த யானையை அடர்ந்த காட்டு பகுதியை நோக்கி மெதுவாக விரட்டினார்கள். நேற்று அதிகாலையில் அந்த யானை மாரண்டஅள்ளி காப்புக் காட்டுக்குள் சென்றது. நேற்று பகலில் மாரண்டஅள்ளி காப்புக்காடு பகுதியில் அந்த யானை தனியாக நடமாடியது. வனத்துறையை சேர்ந்த 10 பேர் கொண்ட வனக்குழுவினர் காப்புக்காடு பகுதியில் முகாமிட்டு யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X