என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதல் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு- தனியார் நிறுவன ஊழியர் தீக்குளித்து தற்கொலை
Byமாலை மலர்23 Oct 2020 3:18 AM GMT (Updated: 23 Oct 2020 3:18 AM GMT)
காதல் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தனியார் நிறுவன ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை:
சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் துர்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 25). இவர் பி.காம். படித்து முடித்துவிட்டு, ஆன்லைன் மூலம் உணவு விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அப்போது பல்லாவரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கோபாலகிருஷ்ணன் தனக்கும், அந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் கோபாலகிருஷ்ணனுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மிகவும் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில், உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், கோபாலகிருஷ்ணனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு 90 சதவீதம் தீக்காயத்துடன் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் துர்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 25). இவர் பி.காம். படித்து முடித்துவிட்டு, ஆன்லைன் மூலம் உணவு விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அப்போது பல்லாவரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கோபாலகிருஷ்ணன் தனக்கும், அந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் கோபாலகிருஷ்ணனுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மிகவும் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில், உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், கோபாலகிருஷ்ணனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு 90 சதவீதம் தீக்காயத்துடன் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X