என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொது ஏலம் ரத்து எதிரொலி: பழனி முருகன் கோவிலுக்கு ரூ.2 கோடி கூடுதல் வருவாய்
Byமாலை மலர்1 Oct 2020 4:55 AM GMT (Updated: 1 Oct 2020 4:55 AM GMT)
பழங்கள் விலை குறைவாக இருந்ததாலும், பொது ஏலமுறை ரத்து செய்யப்பட்டதாலும் பழனி முருகன் கோவிலுக்கு ரூ.2 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
பழனி:
பழனி முருகன் கோவிலில் பணிபுரிய காவலாளி, தூய்மை பணியாளர்களை நியமிப்பது, பஞ்சாமிர்தம் தயாரிப்பது தொடர்பாக ஆண்டுதோறும் பொது ஏலம் விடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில், பணியாளர்களை பணியமர்த்துவது குறித்து பொது ஏலம் நடைபெறவில்லை. அதேநேரத்தில் பஞ்சாமிர்தம் தயாரிப்பு பொருட்களுக்கான ஏலம் தனித்தனியாக விடப்பட்டது.
இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிற மூலப்பொருட்களான பூவன், கற்பூரவல்லி மற்றும் மலை வாழைப்பழத்துக்கான ஏலம் விடப்பட்டது. இந்த ஆண்டு பழங்கள் விலை குறைவாக இருந்ததாலும், பொது ஏலமுறை ரத்து செய்யப்பட்டதாலும் பழனி முருகன் கோவிலுக்கு ரூ.2 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது என்றார்.
மேலும் அவர் கூறும்போது, பஞ்சாமிர்தம் தயாரிக்க சுமார் 2 ஆயிரம் டன் வாழைப்பழம் வாங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு ஒரு கிலோ கற்பூரவல்லி பழம் ரூ.35.45-க்கு ஏலம் போனது. ஆனால் தற்போது ரூ.21.50-க்கு ஏலம் விடப்பட்டது. இதேபோல் கடந்த ஆண்டு ரூ.37-க்கு ஏலம்போன குடகுப்பழம் இந்த ஆண்டு ரூ.35-க்கும், ரூ.83.65-க்கு ஏலம்போன மலைவாழைப்பழம் தற்போது ரூ.80-க்கும் ஏலம் போனது என்று தெரிவித்தார்.
பழனி முருகன் கோவிலில் பணிபுரிய காவலாளி, தூய்மை பணியாளர்களை நியமிப்பது, பஞ்சாமிர்தம் தயாரிப்பது தொடர்பாக ஆண்டுதோறும் பொது ஏலம் விடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில், பணியாளர்களை பணியமர்த்துவது குறித்து பொது ஏலம் நடைபெறவில்லை. அதேநேரத்தில் பஞ்சாமிர்தம் தயாரிப்பு பொருட்களுக்கான ஏலம் தனித்தனியாக விடப்பட்டது.
இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிற மூலப்பொருட்களான பூவன், கற்பூரவல்லி மற்றும் மலை வாழைப்பழத்துக்கான ஏலம் விடப்பட்டது. இந்த ஆண்டு பழங்கள் விலை குறைவாக இருந்ததாலும், பொது ஏலமுறை ரத்து செய்யப்பட்டதாலும் பழனி முருகன் கோவிலுக்கு ரூ.2 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது என்றார்.
மேலும் அவர் கூறும்போது, பஞ்சாமிர்தம் தயாரிக்க சுமார் 2 ஆயிரம் டன் வாழைப்பழம் வாங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு ஒரு கிலோ கற்பூரவல்லி பழம் ரூ.35.45-க்கு ஏலம் போனது. ஆனால் தற்போது ரூ.21.50-க்கு ஏலம் விடப்பட்டது. இதேபோல் கடந்த ஆண்டு ரூ.37-க்கு ஏலம்போன குடகுப்பழம் இந்த ஆண்டு ரூ.35-க்கும், ரூ.83.65-க்கு ஏலம்போன மலைவாழைப்பழம் தற்போது ரூ.80-க்கும் ஏலம் போனது என்று தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X