என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனுஷ்கோடியில் தொடரும் கடல் சீற்றம்- ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
Byமாலை மலர்8 Aug 2020 7:26 AM GMT (Updated: 8 Aug 2020 7:26 AM GMT)
தனுஷ்கோடியில் தொடரும் கடல் சீற்றத்தால் ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் நேற்றும் கடலுக்கு செல்லவில்லை.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியை தொடர்ந்து ராமேசுவரம் பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக பலத்த சூறை காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாக காணப்படுகிறது.
இதுபோல் தனுஷ்கோடியிலும் கடல் சீற்றமாக உள்ளது. எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் மோதி கடல் அலையானது பல அடி உயரம் எழுந்தது. பலத்த காற்றால் தனுஷ்கோடி கம்பிப்பாடு சாலையோரத்தில் உள்ள சங்கு மற்றும் சிப்பி விற்பனை கடைகள், கடற்கரை மணலால் சூழப்பட்டது போன்று காட்சி அளித்தது.
எம்.ஆர்.சத்திரம் பகுதியில் இருந்து அரிச்சல்முனை வரையிலும் தனுஷ்கோடி சாலையை பல இடங்களில் மணல் மூடியது. தனுஷ்கோடிக்கு தினமும் மீன்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் மீனவர்கள் சென்று வரும் இருசக்கர வாகனங்களும் மணலில் சிக்கி தவிக்கின்றன.
கடல் சீற்றம் காரணமாக ராமேசுவரம், பாம்பன் பகுதியில் 4-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகளும், 700-க்கும் அதிகமான நாட்டுப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியை தொடர்ந்து ராமேசுவரம் பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக பலத்த சூறை காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாக காணப்படுகிறது.
இதுபோல் தனுஷ்கோடியிலும் கடல் சீற்றமாக உள்ளது. எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் மோதி கடல் அலையானது பல அடி உயரம் எழுந்தது. பலத்த காற்றால் தனுஷ்கோடி கம்பிப்பாடு சாலையோரத்தில் உள்ள சங்கு மற்றும் சிப்பி விற்பனை கடைகள், கடற்கரை மணலால் சூழப்பட்டது போன்று காட்சி அளித்தது.
எம்.ஆர்.சத்திரம் பகுதியில் இருந்து அரிச்சல்முனை வரையிலும் தனுஷ்கோடி சாலையை பல இடங்களில் மணல் மூடியது. தனுஷ்கோடிக்கு தினமும் மீன்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் மீனவர்கள் சென்று வரும் இருசக்கர வாகனங்களும் மணலில் சிக்கி தவிக்கின்றன.
கடல் சீற்றம் காரணமாக ராமேசுவரம், பாம்பன் பகுதியில் 4-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகளும், 700-க்கும் அதிகமான நாட்டுப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X