search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கி
    X
    துப்பாக்கி

    ராசிபுரம் அருகே முயல் வேட்டைக்கு சென்ற விவசாயி துப்பாக்கி குண்டு பாய்ந்து பலி

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முயல் வேட்டைக்கு சென்ற விவசாயி துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ராசிபுரம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா குமாரபாளையம் அருகேயுள்ள மேற்கு காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் சின்னவன். இவரது மகன் சக்திவேல் (வயது 24). விவசாயி. இவர் தனது நண்பர்களான மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டான்லி மகன் தோனி என்கிற பாபு (18) மற்றும் மங்களபுரம் ஊத்துக்குக்குளிக்காடு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (40) ஆகியோருடன் நேற்று இரவு ஒரு மோட்டார் சைக்களில் மத்துருட்டு ஊராட்சியை சேர்ந்த சிங்கிலியன் கோம்பை மலைப்பகுதிக்கு முயல்வேட்டைக்கு சென்றனர்.

    அப்போது அந்த பகுதியில் ரோட்டின் ஓரத்தில் முயல் ஓடியது. இதைப் பார்த்தவுடன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். உடனே சக்திவேல் தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை செந்தில் குமாரிடம் கொடுத்தார். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக திடீரென்று துப்பாக்கி வெடித்தது. இதில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே சக்திவேல் இறந்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாபு, செந்தில்குமார் ஆகிய இருவரும் இறந்துபோன சக்திவேல் உடலை அவரது வீட்டின் முன்பு போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

    வேட்டைக்கு சென்றவர் பிணமாக கிடப்பதை பார்த்து சக்திவேல் குடும்பத்தினர் கதறி அழுதனர். இது பற்றி அப்பகுதி மக்கள் மங்களபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் மங்களபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதை தொடர்ந்து பாபு, செந்தில்குமார் ஆகிய 2 பேரையும் மங்களபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சக்திவேல் தான் வைத்திருந்த துப்பாக்கியை செந்தில்குமாரிடம் கொடுத்தபோது துப்பாக்கி தவறி வெடித்ததில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே இறந்து போனதாக தெரிய வந்துள்ளது. இறந்துபோன சக்திவேலின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×