என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அம்பன் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை- அமைச்சர் உதயகுமார்
Byமாலை மலர்20 May 2020 7:46 AM GMT (Updated: 20 May 2020 7:46 AM GMT)
அம்பன் புயலால் தமிழகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
சென்னை:
வங்கக்கடலில் உருவான அம்பன் புயல், சூப்பர் புயலாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து பூரி - கொல்கத்தா இடையே வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 22 கிமீ வேகத்தில் நகரும் புயல் இன்று மாலை மேற்குவங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடக்க உள்ளது.
இந்நிலையில் அம்பன் புயலால் தமிழகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
அம்பன் புயல் நெருங்கி வருவதால் ஒடிசா, மேற்கு வங்கத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. மணிக்கு 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசுவதால் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. அடித்தளமில்லாத சாதாரண வீடுகள், குடிசைகளின் மேற்கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் 4.5 லட்சம் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X