என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
12,722 சதுர மீட்டர் நிலத்தை மெட்ரோ நிறுவனத்துக்கு வழங்குகிறது மாநகராட்சி
Byமாலை மலர்21 Feb 2020 9:18 AM GMT (Updated: 21 Feb 2020 9:18 AM GMT)
பெரம்பூரில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்க பூங்கா, அம்மா உணவகம் உள்பட 12,722 சதுர மீட்டர் நிலங்களை மெட்ரோ நிறுவனத்துக்கு மாநகராட்சி வழங்குகிறது.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டை -விமான நிலையத்துக்கு 42 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.
2-வது கட்டமாக மாதவரம்- சிறுசேரிக்கு ரூ.85 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரெயில் வழித்தடபாதை உருவாக்கப்பட உள்ளது. தற்போது மண் ஆய்வு பரிசோதனை பணிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். பெரம்பூரில் மெட்ரோ ரெயில் நிலையம் உருவாக்குவதற்காக பூங்காக்கள், அம்மா உணவகம் உள்பட 12,722 சதுர மீட்டர் நிலத்தை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு மாநகராட்சி வழங்குகிறது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.41.99 கோடி ஆகும். மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு நிலம் வழங்குவது தொடர்பாக மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.
அயனாவரம் 6-வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாநகராட்சி நிலங்களான பெரம்பூர் முரசொலிமாறன் பூங்காவின் ஒரு பகுதி, அம்மா உணவகம், உடற்பயிற்சி கூடம், கூடைப்பந்து மைதானம் திறந்தவெளி விளையாட்டு மைதானம் ஆகிய நிலங்களை மெட்ரோ நிறுவனத்துக்கு மாநகராட்சி விரைவில் வழங்க உள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ நிறுவன அதிகாரிகளும் -மாநகராட்சி அதிகாரிகளும் இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டை -விமான நிலையத்துக்கு 42 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.
2-வது கட்டமாக மாதவரம்- சிறுசேரிக்கு ரூ.85 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரெயில் வழித்தடபாதை உருவாக்கப்பட உள்ளது. தற்போது மண் ஆய்வு பரிசோதனை பணிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். பெரம்பூரில் மெட்ரோ ரெயில் நிலையம் உருவாக்குவதற்காக பூங்காக்கள், அம்மா உணவகம் உள்பட 12,722 சதுர மீட்டர் நிலத்தை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு மாநகராட்சி வழங்குகிறது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.41.99 கோடி ஆகும். மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு நிலம் வழங்குவது தொடர்பாக மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.
அயனாவரம் 6-வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாநகராட்சி நிலங்களான பெரம்பூர் முரசொலிமாறன் பூங்காவின் ஒரு பகுதி, அம்மா உணவகம், உடற்பயிற்சி கூடம், கூடைப்பந்து மைதானம் திறந்தவெளி விளையாட்டு மைதானம் ஆகிய நிலங்களை மெட்ரோ நிறுவனத்துக்கு மாநகராட்சி விரைவில் வழங்க உள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ நிறுவன அதிகாரிகளும் -மாநகராட்சி அதிகாரிகளும் இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X