என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதலிக்க மறுத்ததால் பள்ளி மாணவி கடத்தி கொலை- காதலன் வெறிச்செயல்
Byமாலை மலர்8 Jan 2020 5:10 AM GMT (Updated: 8 Jan 2020 5:10 AM GMT)
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே காதலிக்க மறுத்ததால் பள்ளி மாணவியை கடத்தி கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கழுர் பகுதியை சேர்ந்தவர் இவா டேனியல். பிளஸ்-2 மாணவி.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சபீர் என்பவருக்கம் காதல் ஏற்பட்டது. பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மாணவி சபீருடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.
இதனால் சபீர் ஆத்திரத்தில் இருந்தார். நேற்று மாணவி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் சபீர் வேலை பார்த்த ஒர்க்ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரும் மாயமாகி இருந்தது.
போலீசார் விசாரணை நடத்திய போது சபீருக்கும், மாணவி இவா டேனியலுக்கும் பழக்கம் இருந்தது தெரிய வந்தது. மாணவியை சபீர் கடத்தி சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதற்கிடையே சபீர் கடத்தி வந்த கார் தமிழகத்தை நோக்கி வருவது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
நேற்று மாலை சபீர் ஓட்டி வந்த கார் வால்பாறை அருகே உள்ள வாட்டர் பால்ஸ் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. போலீசார் காரை மடக்கினார்கள்.
காரில் சபீர் மட்டும் இருந்தார். மாணவி இவா டேனியல் இல்லை. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சபீரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது காதலிக்க மறுத்ததால் மாணவியை காரில் கடத்தி வந்து கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ததாக கூறினார்.
மாணவி பிணத்தை வரட்டுப்பாறை என்ற இடத்தில் வனப்பகுதியில் வீசியதாகவும் தெரிவித்தார். சபீரை போலீசார் அங்கு அழைத்து சென்றனர். அவர் மாணவி உடல் வீசப்பட்ட இடத்தை காட்டினார்.
இன்று காலை எர்ணாகுளம் போலீசார் மாணவி உடலை மீட்டு கேரளாவிற்கு அனுப்பி வைத்தனர். மாணவியை கொன்ற காதலன் சபீரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கழுர் பகுதியை சேர்ந்தவர் இவா டேனியல். பிளஸ்-2 மாணவி.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சபீர் என்பவருக்கம் காதல் ஏற்பட்டது. பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மாணவி சபீருடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.
இதனால் சபீர் ஆத்திரத்தில் இருந்தார். நேற்று மாணவி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் சபீர் வேலை பார்த்த ஒர்க்ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரும் மாயமாகி இருந்தது.
போலீசார் விசாரணை நடத்திய போது சபீருக்கும், மாணவி இவா டேனியலுக்கும் பழக்கம் இருந்தது தெரிய வந்தது. மாணவியை சபீர் கடத்தி சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதற்கிடையே சபீர் கடத்தி வந்த கார் தமிழகத்தை நோக்கி வருவது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
நேற்று மாலை சபீர் ஓட்டி வந்த கார் வால்பாறை அருகே உள்ள வாட்டர் பால்ஸ் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. போலீசார் காரை மடக்கினார்கள்.
காரில் சபீர் மட்டும் இருந்தார். மாணவி இவா டேனியல் இல்லை. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சபீரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது காதலிக்க மறுத்ததால் மாணவியை காரில் கடத்தி வந்து கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ததாக கூறினார்.
மாணவி பிணத்தை வரட்டுப்பாறை என்ற இடத்தில் வனப்பகுதியில் வீசியதாகவும் தெரிவித்தார். சபீரை போலீசார் அங்கு அழைத்து சென்றனர். அவர் மாணவி உடல் வீசப்பட்ட இடத்தை காட்டினார்.
இன்று காலை எர்ணாகுளம் போலீசார் மாணவி உடலை மீட்டு கேரளாவிற்கு அனுப்பி வைத்தனர். மாணவியை கொன்ற காதலன் சபீரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X