என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- வாலிபர் போக்சோவில் கைது
கோவை:
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் கோவை கணியூரில் உள்ள தனியார் பஞ்சாலையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு அதே பகுதியை சேர்ந்த ராய்மோன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
ராய்மோன் இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கேரள மாநிலத்துக்கு கடத்தி சென்றார். அங்கு வைத்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது மகளை கண்டு பிடித்து தரும்படி இளம்பெண்ணின் பெற்றோர் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற ராய்மோகனை தேடி வந்தனர்.
சம்பவத்தன்று கேரளாவில் இருந்து கோவைக்கு ரெயிலில் வந்த ராய்மோனையும், அவருடன் இருந்த இளம்பெண்ணையும் மீட்டனர். பின்னர் 2 பேரையும் போலீசில் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
ஆசை வார்த்தை கூறி 17 வயது இளம்பெண்ணை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததால் அவரை கடத்தி சென்ற ராய் மோன் மீது கருமத்தம்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் ராய்மோனை நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்