என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 728 கனஅடியாக அதிகரிப்பு
Byமாலை மலர்21 Oct 2019 7:55 AM GMT (Updated: 21 Oct 2019 9:51 AM GMT)
நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 728 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த 10-ந் தேதி 1,120 கனஅடி நீர்வரத்து இருந்தது.
நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அடுத்தடுத்த நாட்களில் நீர்வரத்து படிப்படியாக சரிந்தது. கடந்த 16-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அணைக்கு 488 கனஅடி நீர்வரத்து இருந்தது.
நேற்று காலை அணைக்கு 648 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 728 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.66 அடிக்கு நீர் இருப்பு இருந்ததால் தென்பெண்ணை ஆற்றில் இன்று வினாடிக்கு, 728 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
கடந்த 4 நாட்களாக அணைக்கு சீரான நீர்வரத்து இருந்த நிலையில், தொடர் மழை காரணமாக நேற்று அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்ததால், நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த 10-ந் தேதி 1,120 கனஅடி நீர்வரத்து இருந்தது.
நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அடுத்தடுத்த நாட்களில் நீர்வரத்து படிப்படியாக சரிந்தது. கடந்த 16-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அணைக்கு 488 கனஅடி நீர்வரத்து இருந்தது.
நேற்று காலை அணைக்கு 648 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 728 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.66 அடிக்கு நீர் இருப்பு இருந்ததால் தென்பெண்ணை ஆற்றில் இன்று வினாடிக்கு, 728 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
கடந்த 4 நாட்களாக அணைக்கு சீரான நீர்வரத்து இருந்த நிலையில், தொடர் மழை காரணமாக நேற்று அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்ததால், நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X