என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவான்மியூரில் நீலநிறத்தில் மின்னிய கடல் அலைகள்
சென்னை:
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவான்மியூர், ஈச்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு கடல் அலைகள் நீல நிறமாக மாறியதாக தகவல் பரவியது.
இதனால் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நள்ளிரவில் கடற்கரை பகுதிகளில் திரண்டனர். திருவான்மியூர் கடற்கரையில் திரண்ட வாலிபர்கள் கடல் அலைகள் நிறம் மாறி இருப்பதை கண்டு ரசித்தனர். பின்னர் தங்களது செல்போன் மற்றும் காமிராக்களில் படம் எடுத்து பகிர்ந்தனர்.
மேலும் அந்த காட்சிகளை பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பரப்பினர்.
கடல் அலைகள் திடீரென நிறம் மாறுவதற்கு காரணம், ஒரு வகை பாசி என கூறப்படுகிறது. அந்த பாசியை சாப்பிட வரும் சிறிய வகை மீன்களிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள இப்படி ஒளியை உமிழ்வதற்கு வாய்ப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பெய்த மழையால் நைட்ரஜன் கலந்த மாசு கடலில் கலந்து இருக்கலாம் என்றும், அதன் காரணமாக கடல் அலைகள் இவ்வாறு மின்னி இருக்கலாம் என்றும் தேசிய கடலோர ஆய்வு மையத்தினர் கூறுகின்றனர். இது தொடர்பாக கடலோரஆய்வு மைய அதிகாரிகள் ஆய்வு நடத்த உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்