என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உளுந்தூர்பேட்டை வார சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
Byமாலை மலர்7 Aug 2019 5:22 AM GMT (Updated: 7 Aug 2019 5:22 AM GMT)
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற வாரசந்தையில் இன்று மட்டும் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
உளுந்தூர்பேட்டை:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரம் தோறும் புதன்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.
அங்குள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே உள்ள ஏரிக்கரையில் இந்த ஆட்டு சந்தை நடைபெறும்.
இந்த சந்தைக்கு விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் ஆடுகளை இந்த சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவார்கள்.
அதுபோல் ஆடுகளை வாங்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி செல்வார்கள்.
வருகிற 12-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று உளுந்தூர்பேட்டையில் உள்ள வார சந்தைக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சரக்கு வேன்களில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
இன்று வழக்கத்தை விட அதிகமான ஆடுகள் சந்தைக்கு கொண்டுவரப்பட்டன. செம்மறி ஆடு, வெள்ளாடு போன்ற ஆடுகள் அதிக அளவில் கொண்டுவரப்பட்டன.
தியாகதுருகத்தை சேர்ந்த இஸ்மாயில் என்பவர் ஜமுனாபுரி என்ற உயர்ரக ஆட்டை விற்பனைக்கு கொண்டுவந்தார். இந்த ஆடு 100 கிலோ எடை கொண்டதாகும். இந்த ஆட்டை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்க முயன்றனர். கடைசியில் இந்த ஆடு ரூ.55 ஆயிரத்துக்கு விலைபோனது.
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற வாரசந்தையில் இன்று மட்டும் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆடுகளை வாங்கியவர்கள் வேன் மற்றும் டெம்போக்களில் தங்கள் ஊருக்கு கொண்டுசென்றனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரம் தோறும் புதன்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.
அங்குள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே உள்ள ஏரிக்கரையில் இந்த ஆட்டு சந்தை நடைபெறும்.
இந்த சந்தைக்கு விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் ஆடுகளை இந்த சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவார்கள்.
அதுபோல் ஆடுகளை வாங்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி செல்வார்கள்.
வருகிற 12-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று உளுந்தூர்பேட்டையில் உள்ள வார சந்தைக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சரக்கு வேன்களில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
இன்று வழக்கத்தை விட அதிகமான ஆடுகள் சந்தைக்கு கொண்டுவரப்பட்டன. செம்மறி ஆடு, வெள்ளாடு போன்ற ஆடுகள் அதிக அளவில் கொண்டுவரப்பட்டன.
இந்த ஆடுகளை வாங்க விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டகளிலிருந்து வியாபாரிகள் அதிக அளவில் அதிகாலை முதலே சந்தைக்கு வந்திருந்தனர். சந்தைக்கு கொண்டுவரப்பட்ட ஆடுகள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. ஆடுகளை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
தியாகதுருகத்தை சேர்ந்த இஸ்மாயில் என்பவர் ஜமுனாபுரி என்ற உயர்ரக ஆட்டை விற்பனைக்கு கொண்டுவந்தார். இந்த ஆடு 100 கிலோ எடை கொண்டதாகும். இந்த ஆட்டை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்க முயன்றனர். கடைசியில் இந்த ஆடு ரூ.55 ஆயிரத்துக்கு விலைபோனது.
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற வாரசந்தையில் இன்று மட்டும் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆடுகளை வாங்கியவர்கள் வேன் மற்றும் டெம்போக்களில் தங்கள் ஊருக்கு கொண்டுசென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X