என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடி திமுக பிரமுகர் கொலை- பொள்ளாச்சி கோர்ட்டில் 2 பேர் சரண்
Byமாலை மலர்30 July 2019 4:56 AM GMT (Updated: 30 July 2019 4:56 AM GMT)
தூத்துக்குடி தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் சரணடைந்த 2 பேர் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
பொள்ளாச்சி:
தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசலை சேர்ந்தவர் வி.எஸ்.கருணாகரன்(55), இவர் தூத்துக்குடி அனல் மின்நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒப்பந்த பணிகளை செய்துவந்தார்.
தி.மு.க. செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார். கடந்த 22-ந் தேதி குலையன்கரிசலில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டது.
இது குறித்து புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து கருணாகரன் கொலை தொடர்பாக 5 பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், கருணாகரன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குலையன்கரிசலை சேர்ந்த சரவணன்(27), சக்திவேல்(20) ஆகியோர் பொள்ளாச்சி ஜே.எம்.எண்.1 கோர்ட்டில் சரண்அடைந்தனர்.
அவர்களை வருகிற 2-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசலை சேர்ந்தவர் வி.எஸ்.கருணாகரன்(55), இவர் தூத்துக்குடி அனல் மின்நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒப்பந்த பணிகளை செய்துவந்தார்.
தி.மு.க. செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார். கடந்த 22-ந் தேதி குலையன்கரிசலில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டது.
இது குறித்து புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து கருணாகரன் கொலை தொடர்பாக 5 பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், கருணாகரன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குலையன்கரிசலை சேர்ந்த சரவணன்(27), சக்திவேல்(20) ஆகியோர் பொள்ளாச்சி ஜே.எம்.எண்.1 கோர்ட்டில் சரண்அடைந்தனர்.
அவர்களை வருகிற 2-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X