என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எடப்பாடி அருகே கறிக்கடை ஊழியர் அடித்துக்கொலை
Byமாலை மலர்14 Jan 2019 6:12 AM GMT (Updated: 14 Jan 2019 6:12 AM GMT)
எடப்பாடி அருகே கறிக்கடை ஊழியர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேட்டுத் தெருவில் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி, மேட்டுத் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது55). கூலித்தொழிலாளி. இவருக்கு சத்தியமூர்த்தி(28) என்ற மகனும், சத்யா (20) என்ற மகளும் உள்ளனர்.
சத்திய மூர்த்தி நடைபாதை ஓரத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். சத்யா படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்யா அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவ்விவகாரத்தை கார்த்திகேயன் குடும்பத்தினர் ரகசியமாக வைத்திருந்தனர்.
இதையறிந்த அதே பகுதியை சேர்ந்த கறிக்கடை ஊழியர் சரவணன்(45) என்பவர் சத்யா காதல் திருமணம் செய்து கொண்டது குறித்து பலரிடம் கூறிவந்ததாக தெரிகிறது. இதனால் சரவணனை சத்தம் போடுவதற்காக கார்த்திகேயன் மற்றும் அவரது மகன் சத்திய மூர்த்தி ஆகியோர் நேற்றிரவு அவரை தேடி சென்றனர்.
அப்போது மேட்டுத்தெரு தனியார் பள்ளி முன்பு சரவணன் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அவரை பார்த்ததும் தடுத்து நிறுத்தி, சத்யா பற்றி ஏன் எல்லோரிடமும் சொல்கிறாய்? என கூறி சத்தம் போட்டனர். மேலும் ஏன் இவ்வாறு செய்கிறாய்?, இனிமேல் இப்படி கூறாதே என்று சொல்லி தகராறில் ஈடுபட்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த சரவணன் கத்தியை எடுத்து கார்திகேயனையும், சத்தியமூத்தியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. தங்களை தாக்கியதால் கோபம் அடைந்த சத்திய மூர்த்தி அருகில் கிடந்த கட்டையை எடுத்துவந்து சரவணனின் தலையில் பலமாக தாக்கினார். இதில் தலை உடைந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. சம்பவ இடத்திலேயே சரவணன் சுருண்டு விழுந்து துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கத்திக்குத்தில் காயமடைந்த கார்த்திகேயனும், சத்தியமூர்த்தியும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்கள் இருவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட சரவணன், கார்த்திகேயனின் அக்காள் மகன் ஆவார். கறிக்கடை ஊழியர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேட்டுத் தெருவில் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி, மேட்டுத் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது55). கூலித்தொழிலாளி. இவருக்கு சத்தியமூர்த்தி(28) என்ற மகனும், சத்யா (20) என்ற மகளும் உள்ளனர்.
சத்திய மூர்த்தி நடைபாதை ஓரத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். சத்யா படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்யா அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவ்விவகாரத்தை கார்த்திகேயன் குடும்பத்தினர் ரகசியமாக வைத்திருந்தனர்.
இதையறிந்த அதே பகுதியை சேர்ந்த கறிக்கடை ஊழியர் சரவணன்(45) என்பவர் சத்யா காதல் திருமணம் செய்து கொண்டது குறித்து பலரிடம் கூறிவந்ததாக தெரிகிறது. இதனால் சரவணனை சத்தம் போடுவதற்காக கார்த்திகேயன் மற்றும் அவரது மகன் சத்திய மூர்த்தி ஆகியோர் நேற்றிரவு அவரை தேடி சென்றனர்.
அப்போது மேட்டுத்தெரு தனியார் பள்ளி முன்பு சரவணன் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அவரை பார்த்ததும் தடுத்து நிறுத்தி, சத்யா பற்றி ஏன் எல்லோரிடமும் சொல்கிறாய்? என கூறி சத்தம் போட்டனர். மேலும் ஏன் இவ்வாறு செய்கிறாய்?, இனிமேல் இப்படி கூறாதே என்று சொல்லி தகராறில் ஈடுபட்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த சரவணன் கத்தியை எடுத்து கார்திகேயனையும், சத்தியமூத்தியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. தங்களை தாக்கியதால் கோபம் அடைந்த சத்திய மூர்த்தி அருகில் கிடந்த கட்டையை எடுத்துவந்து சரவணனின் தலையில் பலமாக தாக்கினார். இதில் தலை உடைந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. சம்பவ இடத்திலேயே சரவணன் சுருண்டு விழுந்து துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கத்திக்குத்தில் காயமடைந்த கார்த்திகேயனும், சத்தியமூர்த்தியும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்கள் இருவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட சரவணன், கார்த்திகேயனின் அக்காள் மகன் ஆவார். கறிக்கடை ஊழியர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேட்டுத் தெருவில் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X