என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் 5-ந்தேதி பா.ம.க. பொதுக்குழு கூட்டம் - டாக்டர் ராமதாஸ் பங்கேற்பு
Byமாலை மலர்2 Aug 2018 9:16 AM GMT
சேலத்தில் 5-ந்தேதி நடைபெறும் பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்.
சேலம்:
பா.ம.க.மாநில துணை பொதுச்செயலாளர் இரா.அருள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பா.ம.க. சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் இரும்பாலை ரோடு ரெட்டிப்பட்டி பி.சி.சி. திருமண மண்டபத்தில் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு மாநில துணை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மு.கார்த்தி தலைமை தாங்குகிறார். நான் வரவேற்புரை ஆற்றுகிறேன். மாநில துணை பொதுச்செயலாளர்கள் பெ.கண்ணையன், பி.என். குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இக்கூட்டத்தில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். அப்போது அவர், பா.ம.க.வின் 30-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக சேலத்தில் நடத்துவது குறித்தும், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்குகிறார்.
மேலும் தலைவர் ஜி.கே. மணி கலந்துகொண்டு பேசுகிறார். முடிவில் மாவட்ட செயலாளர் சாம்ராஜ் நன்றி கூறுகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் கதிர்.ராசரத்தினம், அண்ணாதுரை, எம்.பி. நடராஜன், ராஜசேகர், மாவட்ட தலைவர்கள் கே.சி. ஆறுமுகம், தி.அப்பு நாடார், டாக்டர் மாணிக்கம், கண்ணன் நாயுடு ஆகியோர் செய்து வருகின்றனர்.
எனவே, இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட ஒன்றிய, பேரூர், நகர, கோட்ட, ஊராட்சி பொறுப்பாளர்கள், கிளை நிர்வாகிகள், செயல்வீரர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
பா.ம.க.மாநில துணை பொதுச்செயலாளர் இரா.அருள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பா.ம.க. சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் இரும்பாலை ரோடு ரெட்டிப்பட்டி பி.சி.சி. திருமண மண்டபத்தில் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு மாநில துணை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மு.கார்த்தி தலைமை தாங்குகிறார். நான் வரவேற்புரை ஆற்றுகிறேன். மாநில துணை பொதுச்செயலாளர்கள் பெ.கண்ணையன், பி.என். குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இக்கூட்டத்தில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். அப்போது அவர், பா.ம.க.வின் 30-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக சேலத்தில் நடத்துவது குறித்தும், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்குகிறார்.
மேலும் தலைவர் ஜி.கே. மணி கலந்துகொண்டு பேசுகிறார். முடிவில் மாவட்ட செயலாளர் சாம்ராஜ் நன்றி கூறுகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் கதிர்.ராசரத்தினம், அண்ணாதுரை, எம்.பி. நடராஜன், ராஜசேகர், மாவட்ட தலைவர்கள் கே.சி. ஆறுமுகம், தி.அப்பு நாடார், டாக்டர் மாணிக்கம், கண்ணன் நாயுடு ஆகியோர் செய்து வருகின்றனர்.
எனவே, இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட ஒன்றிய, பேரூர், நகர, கோட்ட, ஊராட்சி பொறுப்பாளர்கள், கிளை நிர்வாகிகள், செயல்வீரர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X