என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேரவை நிர்வாகிகளுக்கு பொறுப்பு: இன்று நடக்க இருந்த நேர்காணல் ரத்து - தீபா
Byமாலை மலர்25 April 2017 8:05 AM GMT (Updated: 25 April 2017 8:05 AM GMT)
இன்று நடக்க இருந்த எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவைக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் நேர்காணல் நிகழ்ச்சி தவிர்க்க முடியாக காரணத்தால் வருகிற 29ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
சென்னை:
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
எனது தலைமையை ஏற்று தமிழகம் முழுவதும் மக்கள் பணியாற்றிய உண்மையான அம்மாவின் விசுவாசிகள் கடந்த நாட்களில் காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், நாமக்கல், கரூர், சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, அரியலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த பேரவை செயல் வீரர்கள், வீராங்கனைகள் என்னை நேரில் சந்தித்து பேரவையில் பணியாற்ற பொறுப்புகள் வழங்க வேண்டி விருப்ப மனுக்களை அளித்தார்கள்.
பேரவை செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெருவாரியாக என்னுடைய அழைப்பை ஏற்று வந்து விருப்ப மனுக்களை அளித்ததற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் நான் ஏற்கனவே எனது அறிக்கையில் தெரிவித்திருந்த இன்று (25-ந் தேதி) நடைபெற இருந்த நேர்காணல் நிகழ்ச்சி தவிர்க்க முடியாத காரணத்தினால் வருகிற 29-ந்தேதிக்கு மாற்றப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நேரடியாக மனுக்களை பெற்றுக் கொண்டு பரிசீலனை செய்து அவரவர் செயல்பாடுகளுக்கு ஏற்ப பொறுப்புகள் வழங்கப்படும்.
இவ்வாறு தீபா கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
எனது தலைமையை ஏற்று தமிழகம் முழுவதும் மக்கள் பணியாற்றிய உண்மையான அம்மாவின் விசுவாசிகள் கடந்த நாட்களில் காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், நாமக்கல், கரூர், சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, அரியலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த பேரவை செயல் வீரர்கள், வீராங்கனைகள் என்னை நேரில் சந்தித்து பேரவையில் பணியாற்ற பொறுப்புகள் வழங்க வேண்டி விருப்ப மனுக்களை அளித்தார்கள்.
பேரவை செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெருவாரியாக என்னுடைய அழைப்பை ஏற்று வந்து விருப்ப மனுக்களை அளித்ததற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் நான் ஏற்கனவே எனது அறிக்கையில் தெரிவித்திருந்த இன்று (25-ந் தேதி) நடைபெற இருந்த நேர்காணல் நிகழ்ச்சி தவிர்க்க முடியாத காரணத்தினால் வருகிற 29-ந்தேதிக்கு மாற்றப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நேரடியாக மனுக்களை பெற்றுக் கொண்டு பரிசீலனை செய்து அவரவர் செயல்பாடுகளுக்கு ஏற்ப பொறுப்புகள் வழங்கப்படும்.
இவ்வாறு தீபா கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X