என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விஷம் குடித்த காதலி பலி: காதலனுக்கு தீவிர சிகிச்சை
Byமாலை மலர்20 April 2017 6:52 AM GMT (Updated: 20 April 2017 6:52 AM GMT)
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். காதலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த பி.மேட்டூர் பிச்சம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் விஜயலெட்சுமி (வயது 21). சீலநாயக்கன் பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார்.
அதே பகுதியை சேர்ந்த விஜயபிரபு (25) என்ற என்ஜினீயரிங் பட்டதாரியும், விஜயலெட்சுமியும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி விஜயலெட்சுமி விஷம் குடித்தார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அப்போது விஜய பிரபுவின் தூண்டுதலின் பேரிலேயே விஜயலெட்சுமி விஷம் குடித்ததாகவும் புகார் கூறினர்.
இதற்கிடையே தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று விஜய லெட்சுமி பரிதாபமாக இறந்தார். இதை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.
பின்னர் விஜயபிரபு மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தால் மட்டுமே விஜயலெட்சுமியின் உடலை வாங்கி இறுதி சடங்கு செய்வோம் என்றனர்.
இந்த நிலையில் விஜய லெட்சுமி இறந்ததை அறிந்த விஜயபிரபுவும் நேற்று மாலை விஷம் குடித்தார். உடனே அவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் விஜயலெட்சுமியின் உடலை அவரது உறவினர்கள் வாங்கி சென்றனர். விஜயபிரபு மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த பி.மேட்டூர் பிச்சம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் விஜயலெட்சுமி (வயது 21). சீலநாயக்கன் பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார்.
அதே பகுதியை சேர்ந்த விஜயபிரபு (25) என்ற என்ஜினீயரிங் பட்டதாரியும், விஜயலெட்சுமியும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி விஜயலெட்சுமி விஷம் குடித்தார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அப்போது விஜய பிரபுவின் தூண்டுதலின் பேரிலேயே விஜயலெட்சுமி விஷம் குடித்ததாகவும் புகார் கூறினர்.
இதற்கிடையே தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று விஜய லெட்சுமி பரிதாபமாக இறந்தார். இதை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.
பின்னர் விஜயபிரபு மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தால் மட்டுமே விஜயலெட்சுமியின் உடலை வாங்கி இறுதி சடங்கு செய்வோம் என்றனர்.
இந்த நிலையில் விஜய லெட்சுமி இறந்ததை அறிந்த விஜயபிரபுவும் நேற்று மாலை விஷம் குடித்தார். உடனே அவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் விஜயலெட்சுமியின் உடலை அவரது உறவினர்கள் வாங்கி சென்றனர். விஜயபிரபு மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X