என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 610 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
Byமாலை மலர்22 March 2017 5:32 AM GMT (Updated: 22 March 2017 5:32 AM GMT)
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3-வது யூனிட்டில் கொதிகலனில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் 610 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்த யூனிட்டுகள் அடிக்கடி பழுதடைவதாலும், பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவதாலும் இங்கு மின் உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.
அனல்மின் நிலைய 3-வது யூனிட்டில் இன்று கொதிகலனில் திடீரென பழுது ஏற்பட்டு அதில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாட்டால் 1, 2-வது யூனிட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் 3 யூனிட்டுகளிலும் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனல்மின் நிலைய ஊழியர்கள் கூறும் போது, ‘30 ஆண்டுகளை கடத்து இயங்கி வரும் அனல் மின் நிலையத்தில் அடிக்கடி விபத்து மற்றும் பழுது ஏற்பட்டு வருகிறது. தற்போது 4,5-வது யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. 3-வது யூனிட்டில் கொதிகலன் பழுதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அதனை சரிசெய்யும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது’ என்றனர்.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்த யூனிட்டுகள் அடிக்கடி பழுதடைவதாலும், பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவதாலும் இங்கு மின் உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.
அனல்மின் நிலைய 3-வது யூனிட்டில் இன்று கொதிகலனில் திடீரென பழுது ஏற்பட்டு அதில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாட்டால் 1, 2-வது யூனிட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் 3 யூனிட்டுகளிலும் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனல்மின் நிலைய ஊழியர்கள் கூறும் போது, ‘30 ஆண்டுகளை கடத்து இயங்கி வரும் அனல் மின் நிலையத்தில் அடிக்கடி விபத்து மற்றும் பழுது ஏற்பட்டு வருகிறது. தற்போது 4,5-வது யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. 3-வது யூனிட்டில் கொதிகலன் பழுதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அதனை சரிசெய்யும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது’ என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X