என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம் - பாதுகாப்பு வழங்கக் கோரி ஓ.பி.எஸ் அணியினர் மனு
Byமாலை மலர்23 Feb 2017 1:12 PM GMT (Updated: 23 Feb 2017 1:12 PM GMT)
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது போதிய பாதுகாப்பு வழங்கக் கோரி ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
சென்னை:
அ.தி.மு.க.வில் சமீபத்தில் பெரும் விரிசல் ஏற்பட்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினம் நாளை கொண்டாடப்படுகிறது. ஏழை, எளியோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாடுமாறு அ.தி.மு.க தொண்டர்களுக்கு, அக்கட்சியின் பொதுச் செயளாலர் சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் சார்பில், சென்னை ஆர்.கே நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், ஓ.பன்னீர் செல்வம், மதுசூதனன் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், ஆர்.கே நகரில் நாளை நடைபெறும் நிகழ்ச்சிக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கக் கோரி, ஓ.பன்னீர் செல்வம் அணியில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் சார்பில் அவரது வழக்கறிஞர் விஜய குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் சமீபத்தில் பெரும் விரிசல் ஏற்பட்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினம் நாளை கொண்டாடப்படுகிறது. ஏழை, எளியோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாடுமாறு அ.தி.மு.க தொண்டர்களுக்கு, அக்கட்சியின் பொதுச் செயளாலர் சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் சார்பில், சென்னை ஆர்.கே நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், ஓ.பன்னீர் செல்வம், மதுசூதனன் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், ஆர்.கே நகரில் நாளை நடைபெறும் நிகழ்ச்சிக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கக் கோரி, ஓ.பன்னீர் செல்வம் அணியில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் சார்பில் அவரது வழக்கறிஞர் விஜய குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X