என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லித்தோப்பு தொகுதியில் வீடு, வீடாக 2 கிலோ சர்க்கரை வழங்கி நன்றி தெரிவித்த நாராயணசாமி
Byமாலை மலர்27 Jan 2017 9:36 AM GMT (Updated: 27 Jan 2017 9:36 AM GMT)
நெல்லித்தோப்பு தொகுதியில் வீடு, வீடாக சென்று 2 கிலோ சரக்கரை வழங்கி முதல்-அமைச்சர் நாராயணசாமி நன்றி தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதும் நெல்லித்தோப்பு தொகுதி முழுவதும் திறந்த ஜிப்பில் சென்று நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் தொகுதியில் வீடு, வீடாக சென்று நன்றி தெரிவிக்கும் பணியை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று தொடங்கினார். முதல் முதலாக தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று தந்த வெண்ணிலாநகர் பகுதியில் வீடு, வீடாக சென்று நாராயணசாமி நன்றி தெரிவித்தார். அப்போது ஒவ்வொரு வீட்டுக்கும் 2 கிலோ சர்க்கரை வழங்கி, மக்களின் கோரிக்கைகளையும் கேட்டு அறிந்தார். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாகவும் நாராயணசாமி உறுதி அளித்தார்.
முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் அமைச்சர் கந்தசாமி, புதுவை அரசு டெல்லி பிரதிநிதி ஜான்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நீல.கங்காதரன், மூர்த்தி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம், வட்டார தலைவர் பழனி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
தொடர்ந்து நெல்லித்தோப்பு முழுவதும் சென்று நாராயணசாமி சர்க்கரை வழங்கி நன்றி தெரிவித்தார்.
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதும் நெல்லித்தோப்பு தொகுதி முழுவதும் திறந்த ஜிப்பில் சென்று நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் தொகுதியில் வீடு, வீடாக சென்று நன்றி தெரிவிக்கும் பணியை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று தொடங்கினார். முதல் முதலாக தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று தந்த வெண்ணிலாநகர் பகுதியில் வீடு, வீடாக சென்று நாராயணசாமி நன்றி தெரிவித்தார். அப்போது ஒவ்வொரு வீட்டுக்கும் 2 கிலோ சர்க்கரை வழங்கி, மக்களின் கோரிக்கைகளையும் கேட்டு அறிந்தார். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாகவும் நாராயணசாமி உறுதி அளித்தார்.
முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் அமைச்சர் கந்தசாமி, புதுவை அரசு டெல்லி பிரதிநிதி ஜான்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நீல.கங்காதரன், மூர்த்தி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம், வட்டார தலைவர் பழனி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
தொடர்ந்து நெல்லித்தோப்பு முழுவதும் சென்று நாராயணசாமி சர்க்கரை வழங்கி நன்றி தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X