என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
Byமாலை மலர்3 Dec 2016 3:48 AM GMT (Updated: 3 Dec 2016 3:48 AM GMT)
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள முண்டியம்பாக்கம் வழுதாவூர் கூட்டுசாலையில் கடந்த 30-ந் தேதி 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த கோர விபத்தில் 2 வயது ஆண் குழந்தை உள்பட 5 பேர் பலியானார்கள். 45 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட திருக்கோவிலூர் அருகே உள்ள தடுத்தாட்கொண்டூரை சேர்ந்த பொற்கொடி (வயது 58) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனால் பலி எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. பொற்கொடி விழுப்புரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் வார்டனாக பணியாற்றி வந்தார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள முண்டியம்பாக்கம் வழுதாவூர் கூட்டுசாலையில் கடந்த 30-ந் தேதி 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த கோர விபத்தில் 2 வயது ஆண் குழந்தை உள்பட 5 பேர் பலியானார்கள். 45 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட திருக்கோவிலூர் அருகே உள்ள தடுத்தாட்கொண்டூரை சேர்ந்த பொற்கொடி (வயது 58) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனால் பலி எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. பொற்கொடி விழுப்புரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் வார்டனாக பணியாற்றி வந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X