என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
Byமாலை மலர்2 Dec 2016 6:06 AM GMT (Updated: 2 Dec 2016 6:06 AM GMT)
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்கி உள்ளதால் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம்:
மேட்டூரில் பழைய மற்றும் புதிய அனல் மின் நிலையங்கள் உள்ளன.இதில் பழைய அனல் மின் நிலையத்தில் மட்டும் 4 யூனிட்கள் உள்ளன.
ஒவ்வொரு யூனிட்டில் இருந்தும் தலா 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
வழக்கமாக மின்சாரம் தேவை குறைவாக இருக்கும் போது இந்த அனல் மின் நிலையங்களை நிறுத்தி வைத்து பராமரிப்பு பணிகளை செய்வது வழக்கம். அதன்படி நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ததால் மின் தேவை குறைந்துள்ளது. பணி தொடக்கம்
இதையடுத்து அனல் மின் நிலையத்தின் 2-வது யூனிட்டில் பராமரிப்பு பணிகள் இன்று தொடங்கியது. 10 நாட்கள் வரை நடைபெறும் இந்த பராமரிப்பு பணியில் பழுதானவற்றை மாற்றுவது உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது .
இதனால் அந்த யூனிட்டின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட 210 மெகாவாட் மின்சாரம் தற்போது தடைபட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மீண்டும் அதில் மின்சார உற்பத்தி தொடங்கப்படும்.
இதையடுத்து ஒவ்வொரு யூனிட்டிலும் அடுத்தடுத்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேட்டூரில் பழைய மற்றும் புதிய அனல் மின் நிலையங்கள் உள்ளன.இதில் பழைய அனல் மின் நிலையத்தில் மட்டும் 4 யூனிட்கள் உள்ளன.
ஒவ்வொரு யூனிட்டில் இருந்தும் தலா 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
வழக்கமாக மின்சாரம் தேவை குறைவாக இருக்கும் போது இந்த அனல் மின் நிலையங்களை நிறுத்தி வைத்து பராமரிப்பு பணிகளை செய்வது வழக்கம். அதன்படி நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ததால் மின் தேவை குறைந்துள்ளது. பணி தொடக்கம்
இதையடுத்து அனல் மின் நிலையத்தின் 2-வது யூனிட்டில் பராமரிப்பு பணிகள் இன்று தொடங்கியது. 10 நாட்கள் வரை நடைபெறும் இந்த பராமரிப்பு பணியில் பழுதானவற்றை மாற்றுவது உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது .
இதனால் அந்த யூனிட்டின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட 210 மெகாவாட் மின்சாரம் தற்போது தடைபட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மீண்டும் அதில் மின்சார உற்பத்தி தொடங்கப்படும்.
இதையடுத்து ஒவ்வொரு யூனிட்டிலும் அடுத்தடுத்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X