என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
9 ஆயிரம் பாம்புகளை பிடித்த சிவனடியார் பாம்பு கடித்து பலி
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஜைனதெருவை சேர்ந்தவர் மோகன் (54). சிவனடியார். இவர் கொரடாச்சேரி பஸ் நிலையம் அருகே ரீவைண்டிங் கடை நடத்தி வந்தார்.
மேலும் மக்கள் வசிக்கும் பகுதியில் பாம்பு புகுந்து விட்டால் எவ்வித கருவியும் இல்லாமல் பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்து விடுவார். இதனை சேவையாக செய்து வந்தார்.
இவர் இதுவரை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளதா கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி இரவு மன்னார்குடி அருகே உள்ள நீடாமங்கலத்தில் பிடித்த பாம்பை வீட்டுக்கு கொண்டு வந்த அவர் 24-ந் தேதி வனத்துறையிடம் ஒப்படைக்க கொண்டு சென்றார்.
அப்போது அந்த பாம்பு அவரை கடித்து விட்டது.திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோகன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இது குறித்து மன்னார்குடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். * * * சிவனடியார் மோகன்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்