என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் நாளை இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    • இந்தியா முதன்முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. நாளை இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    பொதுவாக இந்திய ஆண்கள் அணி விளையாடும்போது, ரசிகர்கள் அதிக அளவில் நேரில் வந்து பார்ப்பார்கள். பெண் ரசிகர்களும் அதிக அளவில் திரள்வார்கள். இதனால் வீரர்களிடம் டிக்கெட் வாங்கித் தருமாறு நெருங்கிய வட்டாரங்கள் வேண்டுகோள் விடுக்கும். ஆனால், பெண்கள் கிரிக்கெட்டிற்கு அவ்வாறு கூடுவது கிடையாது.

    ஆனால், இந்த இறுதிப் போட்டியை பார்க்க ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இந்திய வீராங்கனைகளிடம் டிக்கெட்டிற்கு ஏற்பாடு செய்யுமாறு பலர் அன்புத்தொல்லை கொடுப்பதாக ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.

    நெருக்கடி கிரிக்கெட்டில் மட்டுமல்ல, உலக கோப்பை இறுதி போட்டி டிக்கெட்டிற்கும்தான். இது சிறந்ததது. கிரிக்கெட் வளர்ச்சிக்கு சாதகமான அறிகுறி.

    "தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெறும்போது, நாம் அதிகமான மாற்றங்களை கிரிக்கெட்டில் பார்க்கலாம். கிரிக்கெட் இன்னும் அதிக வளர்ச்சியை பெறும். அது சர்வதேச அளவில் மட்டுமல்ல. உள்ளூர் அளவில் வளர்ச்சி பெறும். பெண்கள் கிரிக்கெட் இன்றும் அதிகமான சீரியஸ் தன்மை மற்றும் அதிக பார்வையாளர்களை பெறுவதை பார்க்க, நாங்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.

    • அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
    • ஜெமிமா ரோட்ரிக்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து 127 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    புதுடெல்லி:

    மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    கடந்த 30-ம் தேதி நடைபெற்ற 2-வது அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

    ஜெமிமா ரோட்ரிக்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து 127 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

    உலகக் கோப்பை இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி நாளை நவி மும்பையில் உள்ள டாக்டர் டிஒய் பாட்டில் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை தொடரின் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இரு அணிகளும் முதல் முறையாக உலகக் கோப்பை வெல்லும் முயற்சியில் இருப்பதால் இந்தப் போட்டி ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

    • அபிஷேக் சர்மா மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • மற்ற பேட்ஸ்மேன்கள் அபாரமாக ஆடினால் மட்டுமே ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும்.

    ஹோபர்ட்:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.

    5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் (கான்பெரா) மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது 20 ஓவர் ஆட்டம் ஹோபர்ட்டில் நாளை (2-ந் தேதி) நடைபெறுகிறது. நேற்றைய போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி பதிலடி கொடுத்து சமன் செய்யுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    அபிஷேக் சர்மா மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற பேட்ஸ்மேன்கள் அபாரமாக ஆடினால் மட்டுமே ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும். அதே நேரத்தில் பந்துவீச்சு நேர்த்தியாக இருந்தது. நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்த ஆட்டத்திலும் வென்று 2-0 என்ற முன்னிலையை பெறும் வேட்கையில் உள்ளது.

    இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • தோனி ஓய்வு குறித்து கடந்த 6 -7 ஆண்டுகளாக நிறைய வதந்திகள் வந்த வண்ணம் உள்ளது.
    • போன சீசனில் அதிகமாக களத்தில் இருந்து அவரால் விளையாட முடியாது என பயிற்சியாளர் பிளெமிங் கூறியிருந்தார்.

    ஐபிஎல் தொடர் 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிக பட்சமாக மும்பை, சென்னை அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.

    ஐபிஎல் தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை பேசப்பட்டு வரும் பெயராக எம்எஸ் தோனி இருக்கிறது. இந்திய அணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அவர் சிஎஸ்கே மூலமும் பல ரசிகர்களை அவர் கவர்ந்துள்ளார்.

    இந்நிலையில் அவரது ஓய்வு குறித்து கடந்த 6 -7 ஆண்டுகளாக நிறைய வதந்திகள் வந்த வண்ணம் இருந்தது. இந்த வதந்தியால் அவரது ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது தான் மிச்சம். இருந்தாலும் அவரது பேட்டிங்கில் பெரிய அளவில் தாக்கம் இல்லாததால் பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக போன ஆண்டு அதிக என்றே சொல்லலாம்.

    போன சீசனில் அதிகமாக களத்தில் இருந்து அவரால் விளையாட முடியாது என பயிற்சியாளர் பிளெமிங் கூறியிருந்ததால் அடுத்த ஆண்டு தோனி விளையாடுவாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் இடையே எழுந்து வருகிறது. ஏனென்றால் தற்போது அவருக்கு 44 வயதாகிறது.

    இந்நிலையில் அவர் அடுத்த ஆண்டு விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு புகைப்படத்தை பதிவிட்டு சூசகமாக தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

    2020-ம் ஆண்டு IPL-ன் கடைசி லீக் போட்டியின்போது "இதுதான் நீங்க மஞ்சள் ஜெர்சியில் விளையாடும் கடைசி போட்டியா?" என்ற கேள்விக்கு 'கண்டிப்பாக இல்லை' என பதிலளித்திருந்தார் சிஎஸ்கே கேப்டன் தோனி. அந்த புகைப்படத்தை வெளியிட்ட சிஎஸ்கே marks 5 years of #DefinitelyNot என பதிவிட்டிருந்தது.

    இந்த பதிவை வைத்து அடுத்த ஆண்டும் தோனி விளையாடுவார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

    • 2 நாள் ஓய்வுக்குப் பிறகு இறுதிப்போட்டி நவிமும்பையில் உள்ள டி.ஓய். படேல் ஸ்டேடியத்தில் நாளை நடக்கிறது.
    • இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் முதல் முறையாக கோப்பையை வெல்ல உள்ளனர்.

    நவிமும்பை:

    13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி தொடங்கியது.

    இந்தியா, இலங்கையில் நடைபெற்ற இந்த போட்டியில் 8 நாடுகள் பங்கேற்றன. கடந்த 26-ந்தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகியவை முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறின. இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறின.

    29-ந்தேதி கவுகாத்தியில் நடந்த முதல் அரை இறுதியில் தென்ஆப்பிரிக்கா 125 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும் நேற்று முன்தினம் நவிமும்பையில் நடைபெற்ற 2-வது அரை இறுதியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவையும் தோற்கடித்தன.

    2 நாள் ஓய்வுக்குப் பிறகு இறுதிப்போட்டி நவிமும் பையில் உள்ள டி.ஓய். படேல் ஸ்டேடியத்தில் நாளை (2-ந்தேதி) மாலை 3 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்க அணிகள் சாம்பியன் பட்டத்துக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இறுதிப்போட்டிக்கு முன் இரு அணி கேப்டன்களும் போட்டோஷூட் நடத்துவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் நாளை நடக்கவுள்ள இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய மகளிர் அணி கேப்டனும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி கேப்டனும் கோப்பையுடன் போட்டோஷூட் எடுத்துக் கொண்டனர்.

    இது தொடர்பான புகைப்படங்களை ஐசிசி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று நாடே ஆவலுடன் எதிா்பார்க்கிறது.

    3-வது தடவையாக இறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது.இதற்கு முன்பு 2005-ல் ஆஸ்திரேலியாவிடமும் (98 ரன்), 2017-ல் இங்கிலாந்திடமும் (9 ரன்) தோற்று கோப்பையை இழந்தது.

    இந்திய அணி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதற்கு பதிலடி கொடுத்து சாம்பியன் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 339 ரன் இலக்கை எடுத்து சாதனை படைத்ததால் இறுதிப் போட்டியில் இந்தியா நம்பிக்கையுடன் விளையாடும்.

    பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா (1 சதம், 2 அரை சதத்துடன் 389 ரன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (1 சதம், 1 அரை சதத்துடன் 268 ரன்), கேப்டன் ஹர்மன் பிரீத் கவூர் (2 அரை சதத்துடன் 240 ரன்), ரிச்சா கோஷ் (1 அரை சதத்துடன் 201 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் தீப்தி சர்மா (17 விக்கெட்), ஸ்ரீசரணி (13 விக்கெட்) , கிராந்தி கவூட் (9 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    லாரா வால்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் முதல் தடவையாக உலக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. அந்த அணி முதல் முறையாக இறுதி ஆட்டத்தில் ஆடுகிறது.

    இந்தியாவை ஏற்கனவே வீழ்த்தி இருப்பதால் நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்கா சமபலத்துடன் திகழ்கிறது.

    இரு அணிகளும் 34 ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 20-ல், தென் ஆப்பிரிக்கா 13-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.

    • முதலில் நடந்த டி20 தொடரை இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது
    • ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது.

    வெல்லிங்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1-0 என இங்கிலாந்து கைப்பற்றியது.

    இதனை தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளின் முடிவில் 2-0 என நியூசிலாந்து தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சேல் சாண்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் முதல் 4 வீரர்களான ஜேமி ஸ்மித் 5, டக்கெட் 8, ரூட் 2, ஹாரி ப்ரூக் 6 ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 40.2 ஓவரில் 222 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    அதிகபட்சமாக ஜேமி ஓவர்டன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து தரப்பில் டிக்னர் 4 விக்கெட்டும் ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டேவான் கான்வே - ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். இருவரும் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தது. கான்வே 34 ரன்னிலும் ரச்சின் 46 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதனை தொடர்ந்து வந்த வில் யங் 1 ரன்னிலும் டாம் லாதம் 10, பிரெஸ்வெல் 13 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து மிட்செல் மற்றும் சாட்னர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சாட்னர் 27 ரன்னில் வெளியேறினார்.

    இதனையடுத்து நாதன் ஸ்மித் 2 ரன்னிலும் கடைசி வரை போராடிய மிட்செல் 44 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 196 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்ததால் ஆட்டம் பரபரப்பானது.

    இந்நிலையில் ஜகரி ஃபௌல்க்ஸ்- பிளேர் டிக்னர் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இதனால் நியூசிலாந்து அணி 44.4 ஓவரில் 226 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசம் 11 ரன் எடுத்தார்.
    • பாபர் அசம் 130 டி20 போட்டியில் 4234 ரன் எடுத்துள்ளார்.

    லாகூர்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 இருபது ஓவர் தொடரில் ராவல்பிண்டியில் நடந்த முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 55 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 19.2 ஓவரில் 110 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 13.1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 112 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசம் 11 ரன் எடுத்தார். 9-வது ரன்னை எடுத்தபோது அவர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் அதிக ரன் எடுத்த ரோகித் சர்மா சாதனையை முறியடித்தார். பாபர் அசம் 130 ஆட்டத்தில் 4234 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 4231 ரன்னுடன் (159 போட்டி) 2-வது இடத்தில் உள்ளார்.

    ஆண்கள் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்:-

    பாபர் அசாம் -130 போட்டிகளில் 4232*

    ரோகித் சர்மா - 159 போட்டிகளில் 4231

    விராட் கோலி - 125 போட்டிகளில் 4188

    ஜோஸ் பட்லர் - 144 போட்டிகளில் 3869

    • பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரான ஏசிசி தலைவரிடமிருந்து நாங்கள் கோப்பையை வாங்கமுடியாது.
    • கோப்பை அவரது கைகளிலிருந்து வரக்கூடாது, ஆனால் வர வேண்டும் என கூறினார்.

    சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. அப்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோசின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்தியா மறுத்தது.

    இதையடுத்து, அந்தக் கோப்பையை மோசின் நக்வி கொண்டு சென்றார். இந்திய அணியினர் கோப்பை இல்லாமலேயே வெற்றியைக் கொண்டாடினர். இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தக் கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பிசிசிஐயும் வலியுறுத்தியது.

    அதற்குப் பதிலளித்த நக்வி, கோப்பையை தாம்தான் வழங்குவேன் எனவும் வரும் நவம்பர் 10-ம் தேதி துபாயில் இந்திய அணிக்கு ஆசியக் கோப்பையை வழங்கும் நிகழ்ச்சியை வைத்திருப்பதாகவும், இதில் தவறாமல் இந்திய அணி வீரர்களும் கேப்டன் சூர்யகுமார் யாதவும் கலந்துகொள்ள வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஆசிய கோப்பையை அவரது கைகளிலிருந்து வாங்க மாட்டோம் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாங்கள் ஆசிய கிரிக்கெட் கவுன்சில்-ஐ அணுகி 10 நாட்களுக்கு முன்பு ஒரு கடிதம் அனுப்பியுள்ளோம். ஆனால் எந்தவித நல்ல பதிலும் வரவில்லை. நாங்கள் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம். அதனால் நவம்பர் மாதம் 4-ந் தேதி நடக்கும் ஐசிசி ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து பிரச்சனைகளை எழுப்ப உள்ளோம்.

    ஆசிய கோப்பை எங்களிடம் வரும். அது நிச்சயம். ஏனென்றால் அதனை இந்தியா வென்றுள்ளது. நாங்கள் அதை அவரிடமிருந்து (மொஹ்சின் நக்வி) வாங்க வேண்டியிருந்தால், இறுதிப் போட்டியின் போதே வாங்கிருப்போம்.

    எங்கள் நிலைப்பாடு மிகத் தெளிவாக உள்ளது. நாங்கள் அவரிடமிருந்து அதை வாங்க விரும்பவில்லை. எனவே, பிசிசிஐயின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரான ஏசிசி தலைவரிடமிருந்து நாங்கள் கோப்பையை வாங்கமுடியாது. எனவே, கோப்பை அவரது கைகளிலிருந்து வரக்கூடாது, ஆனால் வர வேண்டும்.

    என பிசிசிஐ செயலாளர் கூறினார்.

    • ஸ்மிருதி மந்தனா இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையாகவும், துணை கேப்டனாகவும் இருந்து வருகிறார்.
    • ஒருநாள் உலக கோப்பை தொடரில் மந்தனா 2 அரைசதம் 1 சதம் விளாசியுள்ளார்.

    மும்பை,

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மும்பையை சேர்ந்த 29 வயதாகும் இடது கை பேட்டரான ஸ்மிருதி மந்தனா இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையாகவும், துணை கேப்டனாகவும் இருந்து வருகிறார். இவருக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

    இதற்கிடையே ஸ்மிருதி மந்தனாவும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த பலாஷ் முச்சல் இசையமைப்பாளராக உள்ளார். சில ஆல்பங்களையும் இவர் வெளியிட்டிருக்கிறார்.

    இந்நிலையில் ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சல் ஜோடிக்கு நவம்பர் 20-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள ஸ்மிருதியின் சொந்த ஊரான சங்லியில் திருமண நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் மந்தனா 2 அரைசதம் 1 சதம் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • விலா எலும்பையும் தாண்டி மண்ணீரலில் கீறல் ஏற்பட்டு, அதனால் ரத்தக்கசிவு உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது.
    • தான், நலமாக இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் எக்ஸ் தளத்தில் ஷ்ரேயாஸ் தெரிவித்தார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (24 ரன்) அடித்த பந்தை இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்து அருமையாக கேட்ச் செய்தார். அப்போது மைதானத்தில் விழுந்ததில் அவரது இடது விலாப்பகுதி பலமாக இடித்தது. வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

    'ஸ்கேன்' பரிசோதனை மேற்கொண்ட போது, மண்ணீரலில் கீறல் ஏற்பட்டு, அதனால் ரத்தக்கசிவு உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அணி டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஷ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    சில நாட்களிலேயே அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் மருத்துவமனையில் டாக்டர்கள் கண்கானிப்பில் இருந்து வந்தார். 2 நாட்களுக்கு முன்னர் நலமாக இருப்பதாகவும் தனது நலனுக்காக வேண்டிய அனைவருக்கும் நன்றி என பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் அவர் குணமடைந்ததில் பிசிசிஐ மருத்துவக் குழுவும், சிட்னி மற்றும் இந்தியாவில் உள்ள நிபுணர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இங்கிலாந்து தரப்பில் ஜேமி ஓவர்டன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • நியூசிலாந்து தரப்பில் டிக்னர் 4 விக்கெட்டும் ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    வெல்லிங்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1-0 என இங்கிலாந்து கைப்பற்றியது.

    இதனை தொடர்ந்து நடந்து வரும் ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளின் முடிவில் 2-0 என நியூசிலாந்து தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சேல் சாண்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் முதல் 4 வீரர்களான ஜேமி ஸ்மித் 5, டக்கெட் 8, ரூட் 2, ஹாரி ப்ரூக் 6 ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். அடுத்த வந்த ஜேக்கப் பெத்தேல் 11,

    இதனையடுத்து சாம் கரண்- பட்லர் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்தது. சாம் கரண் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் பட்லர் 38 ரன்னில் அவுட் ஆனார்.

    கடைசி வரை போராடிய ஜேமி ஓவர்டன் அரை சதம் கடந்து அசத்தினார். அவர் 68 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 40.2 ஓவரில் 222 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    நியூசிலாந்து தரப்பில் டிக்னர் 4 விக்கெட்டும் ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஜெமிமா ரோட்ரிக்ஸை பலரும் பாராட்டி வருகின்றனர்.
    • ஜெமிமா ரோட்ரிக்ஸ் குறித்த பழைய எக்ஸ் தள பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

    மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நவிமும்பையில் நடந்த பரபரப்பான அரைஇறுதியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை விரட்டியடித்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 339 ரன் இலக்கை ஜெமிமா ரோட்ரிக்ஸ் (127 ரன், 14 பவுண்டரி), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (89 ரன்) ஆகியோரது அசாத்தியமான பேட்டிங்கால் இந்திய அணி 48.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. இதன் மூலம் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை விரட்டிப்பிடித்த அணி என்ற புதிய சாதனையை இந்தியா படைத்தது.

    கடைசி வரை களத்தில் நின்று வெற்றிக்கு அழைத்து சென்ற ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளப்பூரிப்பில் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் நீண்ட நேரம் தேம்பி தேம்பி அழுதார்.

    இதையடுத்து அவர் பேசுகையில், முதலில் நான் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எல்லாம் கனவு போல் இருக்கிறது. இந்தியாவை வெற்றி பெறச் செய்வதே எனது எண்ணமாக இருந்தது. கடந்த ஆண்டு உலக கோப்பையில் இருந்து நீக்கப்பட்டேன். அந்த வலி இன்னும் மனதில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அழுதிருக்கிறேன். நிறைய கடினமான நாட்களை கடந்து வந்திருக்கிறேன். கடவுள் சரியான நேரத்தில் எல்லாவற்றையும் கொடுப்பார். தன்மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி என்று கூறி நெகிழ்ந்தார்.

    127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஜெமிமா ரோட்ரிக்ஸை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், ஜெமிமா ரோட்ரிக்ஸ் குறித்த பழைய எக்ஸ் தள பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

    2018ம் ஆண்டு ஜெமிமா ரோட்ரிக்ஸ் உடன் செய்த வலைப்பயிற்சிக்கு பின், 'ஜெமிமா ரோட்ரிக்ஸ் என்ற பெயரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இன்று அவள் சில தோல்விகளைச் சந்தித்தார். ஆனால் ஜெமிமா இந்திய அணியின் நட்சத்திர வீரராக உருவெடுப்பார்' என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் பதிவிட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.



    ×