என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • சீனிவாசராஜ் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளராக பணியாற்றி இருந்தார்.
    • புதிய தலைவர் குறித்து அதிகாரப்பூர்வமாக இன்று மாலை அறிவிக்கப்படும்.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 93-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக டி.ஜே.சீனிவாசராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்று மாலை அறிவிக்கப்படும். அவர் இதற்கு முன்பு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளராக பணியாற்றி இருந்தார்.

    இதேபோல துணைத் தலைவராக எம்.குமரேஷ், பொருளாளராக ஆர்.ரங்கராஜன் மற்றும் 3 செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

    செயலாளர், இணை செயலாளர், உதவி செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. 205 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.

    • 3 ஆவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
    • சுப்மன் கில் வருகையால் சஞ்சு சாம்சனின் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.

    5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் (கான்பெரா) மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது 20 ஓவர் ஆட்டம் ஹோபர்ட்டில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இப்போட்டியில் சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவுக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடியாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் சுப்மன் கில் வருகையால் மிடில் ஆர்டர் பினிஷிங் என மாறி மாறி களமிறக்கப்பட்டார். இப்போது அணியில் இருந்தும் டிராப் செய்யப்பட்டுள்ளார். இதனால் சஞ்சு சாம்சனின் டி20 கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி மாறியுள்ளது.

    • முதல் 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் (கான்பெரா) மழையால் பாதியில் கைவிடப்பட்டது.
    • 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.

    5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் (கான்பெரா) மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது 20 ஓவர் ஆட்டம் ஹோபர்ட்டில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    2 ஆவது போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன
    • முதல்முறையாக உலகக் கோப்பையை வெல்ல இரு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும்.

    13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின.

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின. இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

    இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இந்நிலையில், மகளிர் உலக கோப்பை இறுதிப்போட்டி நடைபெறும் நவி மும்பையில் இன்று மழை பெய்ய 63% வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    ஒருவேளை மழையால் ஆட்டம் முழுமையாக தடைபட்டால் நாளைக்கு ஒத்திவைக்கப்படும். நாளையும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு 50 ஓவர் உலக கோப்பை பகிர்ந்து தரப்படும்.

    • இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன
    • முதல்முறையாக உலகக் கோப்பையை வெல்ல இரு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும்.

    13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின.

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின. இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

    இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெறவேண்டி பெங்களூருவில் மக்கள் பிரார்த்தனை செய்தனர்.

    மேலும், உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் நகரிலும் இந்திய அணியின் வெற்றிக்காக மக்கள் பிரார்த்தனை செய்தனர்.

    • இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
    • முதல்முறையாக உலகக் கோப்பையை வெல்ல இரு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும்.

    13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின.

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின. இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

    இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இந்த போட்டிக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வால்வார்ட், "இறுதிப்போட்டியில் நாங்கள் வெற்றிபெறுவோம். இது மைதானத்தை அமைதியாக்கும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    தென் ஆப்பிரிக்க கேப்டனின் இந்த பேச்சு 2023 இல் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸின் பேச்சை நினைவுபடுத்தியது.

    2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பாக பேசிய பேட் கம்மின்ஸ், "1.3 லட்சம் ரசிகர்கள் கூட்டத்தை அமைதியாக்குவதை விட திருப்திகரமான ஒன்று எதுவும் இருக்காது. நாளை எங்களின் இலக்கு அதுவாகத்தான் இருக்கும்" என்று கூறினார்

    • இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின.
    • இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

    13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின.

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின. இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

    இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இந்நிலையில், இந்திய மகளிர் அணி உலகக்கோப்பையை வெல்ல வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணற்சிற்பம் உருவாக்கியுள்ளார்.

    • அரையிறுதியில் 4 முறை சாம்பியனான இங்கிலாந்தை விரட்டியடித்து முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.
    • இவ்விரு அணிகளும் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின. இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் கோதாவில் குதிக்கின்றன.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் 3 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் (7 புள்ளி) 4-வது இடம் பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. அரையிறுதியில் 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    அரையிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா நிர்ணயித்த 339 ரன் இலக்கை ஜெமிமா ரோட்ரிக்சின் (127 ரன்) சதம், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் (89 ரன்) அரைசதத்தின் உதவியுடன் இந்திய அணி 9 பந்துகள் மீதம் வைத்து எட்டிப்பிடித்து வியக்க வைத்தது. அத்துடன் பெண்கள் ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிகபட்ச ரன் இலக்கை வெற்றிகரமாக விரட்டிபிடித்த அணி என்ற சாதனையை தன்வசப்படுத்திய கையோடு இந்தியா இந்த ஆட்டத்தில் கால் பதிக்கிறது.

    2005, 2017-ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டியில் தோற்று கோப்பையை கோட்டை விட்ட இந்திய அணி, தங்களது கோப்பை கனவை இந்த முறையாவது நனவாக்கிட வேண்டும் என்று கங்கணம் கட்டி களத்தில் கடுமையாக போராடி வருகிறது. லீக் சுற்றில் தென்ஆப்பிரிக்காவை 5 விக்கெட்டுக்கு 81 ரன் என்ற நெருக்கடிக்குள்ளாக்கி நல்ல நிலையில் இருந்த இந்திய அணி அதன் பிறகு தனது பிடியை நழுவ விட்டதால் தோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் இருந்து பாடம் கற்று இருக்கும் இந்திய அணி பதிலடி கொடுக்க சரியான வியூகத்துடன் ஆயத்தமாகிறது. அத்துடன் உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவும் இந்திய அணிக்கு ஊக்கம் அளிக்கும்.

    இந்திய அணியில் பேட்டிங்கில் ஸ்மிர்தி மந்தனா (ஒருசதம், 2 அரைசதம் உள்பட 389 ரன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (ஒரு சதம், ஒரு அரைசதம் உள்பட 268 ரன்), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஸ்ரீசரனி (13 விக்கெட்), கிரந்தி கவுட், சினே ராணா, ராதா யாதவ் நம்பிக்கை அளிக்கிறார்கள். தீப்தி ஷர்மா (157 ரன், 17 விக்கெட்) ஆல்-ரவுண்டராக ஜொலிக்கிறார்.

    தென்ஆப்பிரிக்க அணி லீக் சுற்றில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் (10 புள்ளி) 3-வது இடம் பிடித்து அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. அரையிறுதியில் 4 முறை சாம்பியனான இங்கிலாந்தை விரட்டியடித்து முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.

    தென்ஆப்பிரிக்க அணியில் கேப்டன் லாரா வோல்வார்ட் சூப்பர் பார்மில் இருக்கிறார். அவர் இதுவரை ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 470 ரன்கள் எடுத்து ரன் குவிப்பில் முதலிடத்தில் உள்ளார். தஸ்மின் பிரிட்ஸ் (ஒரு சதம், ஒரு அரைசதத்துடன் 212 ரன்) கணிசமான பங்களிப்பை அளித்துள்ளார். மரிஜானே காப் (204 ரன், 12 விக்கெட்), நடினே டி கிளெர்க் (190 ரன், 8 விக்கெட்) ஆல்-ரவுண்டர்களாக அசத்துகிறார்கள்.

    தென்ஆப்பிரிக்க ஆண்கள் மற்றும் பெண்கள் அணி கடந்த ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு எல்லாம் இந்த முறை பரிகாரம் தேட முயற்சிப்பார்கள்.

    மொத்தத்தில் முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இது இறுதிப்போட்டி என்பதால் இரு அணிக்குமே கடும் சவாலும், நெருக்கடியும் இருக்கும். அதை எந்த அணி திறம்பட சமாளிக்கிறதோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 20-ல் இந்தியாவும், 13-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    போட்டி நடக்கும் நவிமும்பையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை பெய்வதற்கு 63 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டத்தில் முடிவு கிடைக்காமல் போனால் மாற்று நாளான மறுநாளில் நடைபெறும்.

    இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.39½ கோடி பரிசாக வழங்கப்படும். 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.19¾ கோடி கிடைக்கும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ஷபாலி வர்மா, ஸ்மிர்தி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், ராதா யாதவ் அல்லது சினே ராணா, கிரந்தி கவுட், ஸ்ரீ சரனி, ரேணுகா சிங்.

    தென்ஆப்பிரிக்கா: லாரா வோல்வார்ட் (கேப்டன்), தஸ்மின் பிரிட்ஸ், அன்னெகே பாஷ் அல்லது மசபடா கிளாஸ், சுனே லூஸ், மரிஜானே காப், சினாலோ ஜப்தா, அன்னெரி டெர்க்சன், குளோயி டிரையான், நடினே டி கிளெர்க், அயாபோங்கா காகா, மிலாபா.

    பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணியின் 3 வடிவிலான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக இருந்துள்ளார்.
    • 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் கேப்டனாக இருந்து, 105-107 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன். இவர் 2016-ம் ஆண்டு நியூசிலாந்து அணியின் 3 வடிவிலான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றார். மொத்தமாக, அவர் 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் கேப்டனாக இருந்து, 105-107 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

    இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார். இருப்பினும் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதுவரை 93 டி20 போட்டிகளில் ஆடியுள்ள கேன் வில்லியம்சன் 18 அரை சதத்துடன் 2,575 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்தியாவுக்கு பின்னால் இருக்கும் இந்த போட்டி மிகவும் கடினமாக இருக்கப் போகிறது.
    • இது மிகவும் உற்சாகமான வாய்ப்பாகும். அதே சமயத்தில், இந்தியாவுக்கு அதிக அளவில் நெருக்கடியை உண்டாக்கும்.

    மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் போட்டியில் தென்ஆப்பிரிக்கா இந்தியாவை தோற்கடித்திருந்தது.

    லீக் போட்டியில் இங்கிலாந்து தென்ஆப்பிரிக்காவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. ஆனால் அரையிறுதியில் தென்ஆப்பிரிக்கா அபாரமாக இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது.

    இந்தியா லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்திருந்தாலும், அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது.

    நாளை இந்தியாவை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், நாக்அவுட் போட்டி லீக்கில் இருந்து முற்றிலும் மாறுபட்டது, எனவே, ப்ரஷாக தொடங்குவோம் என தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் லாரா வால்வார்த் தெரிவித்துள்ளார்.

    இறுதிப் போட்டி குறித்து தென்ஆப்பிரிக்கா கேப்டன் லாரா வால்வொர்த் கூறியதாவது:-

    நாக்அவுட் கிரிக்கெட் லீக் கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரராக ஜெமிமா ரோட்ரிக்ஸ் விளையாடியதை நாம் பார்த்ததுபோன்று, சிலர் நாக்அவுட் போட்டியில் விளையாடும் திறமையை பெற்றுள்ளனர் என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

    லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை பார்த்து நாங்கள் செல்வோம் என்று நினைக்கவில்லை. நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடியுள்ளோம் என்பது எங்களுக்கு தெரியும். இந்தியா மிகவும் வலுவான அணி. அவர்கள் சிறந்த ஆட்டத்தை விளையாடியுள்ளனர். இதனால் அவர்கள் மிகப்பெரிய அளவிலான நம்பிக்கையில் இருப்பார்கள்.

    நாங்கள் இறுதிப் போட்டியில் தோற்ற வரலாறு, லீக்கில் இந்தியாவை வீழ்த்தியது போன்ற வரலாற்றை கொண்டு வர முடியாது. நாங்கள் அவை அனைத்தும் அப்புறப்படுத்திவிட்டு முற்றிலும் ப்ரெஷயாக தொடங்க முயற்சிக்கிறோம்.

    ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்தியாவுக்கு பின்னால் இருக்கும் இந்த போட்டி மிகவும் கடினமாக இருக்கப் போகிறது. ஏறக்குறைய டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன. இது மிகவும் உற்சாகமான வாய்ப்பாகும். அதே சமயத்தில், இந்தியாவுக்கு அதிக அளவில் நெருக்கடியை உண்டாக்கும்.

    இவ்வாறு லாரா வால்வார்த் தெரிவித்துள்ளார்.

    • முதல் நாள் முடிவில் கர்நாடகா 3 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் கருண் நாயர் 142 ரன்கள் விளாசினார்.

    திருவனந்தபுரம்:

    ரஞ்சி டிராபியின் 3வது போட்டி இன்று தொடங்கியது.

    வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நீக்கப்பட்ட கருண் நாயர் கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கேரளா அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 142 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

    கர்நாடகா அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்துள்ளது.

    இந்திய அணியின் முன்னணி டெஸ்ட் வீரராக திகழ்ந்த ரகானே, மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இவர் சத்தீஸ்கர் அணிக்கெதிராக 159 ரன்கள் விளாசினார்.

    4வது விக்கெட்டுக்கு இணைந்த கருண் நாயர்-ரவிச்சந்திரன் ஜோடி இதுவரை 183 ரன்கள் சேர்த்துள்ளது.

    உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி தொடர்ந்து சதமடித்த போதிலும் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் வெளியேறுவது உறுதியாகிவிட்டது.
    • டெல்லி டேர்டெவில்ஸ் அணி அவரை Trade செய்யலாம் எனத் தகவல்.

    கேரளாவைச் சேர்ந்த இந்திய கிரிகெட் வீரரான சஞ்சு சாம்சன் நீண்ட காலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு அவருக்கும், தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

    இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேற இருப்பது ஏறக்குறைய உறுதியானது. ஆனால், எந்த அணிக்கு செல்வார் என்பதில் மர்மம் நீடித்து வந்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை வாங்க விரும்புவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் டெல்லி அணி அவரை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    டிரிஸ்டன ஸ்டப்ஸை ராஜஸ்தானுக்கு கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக சஞ்சு சாம்சனை டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் உலா வருகின்றன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சனை கொடுத்துவிட்டு, ஸ்டப்சை வாங்க சம்மதம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் Uncapped வீரர் ஒருவரையும் கேட்டுள்ளது. ஆனால், டெல்லி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

    ×