search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணற்சிற்பம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜியின் 126வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
    • மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் நேதாஜியின் மணல் சிற்பத்தை ஒடிசாவில் உருவாக்கியுள்ளார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

    இதற்கிடையே, விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 126வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புரி கடற்கரையில் மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் நேதாஜியின் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

    மணல் சிற்பத்துக்குப் பின்னால் சுமார் 450 ஸ்டீல் கிண்ணங்களையும் பயன்படுத்தியுள்ளார். மேலும் நேதாஜி என்றும், ஜெய்ஹிந்த் என்னும் சொற்களையும் வரைந்துள்ளார்.

    • மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று தொழிலதிபர் ரத்தன் டாடா உயிரிழந்தார்.
    • மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

    பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

    அதன்படி இன்று மாலை மும்பையில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்நிலையில், ரத்தன் டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, கடற்கரையில் மணல் சிற்பம் வடிவமைத்த பிரபல சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக், ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் ரத்தன் டாடாவுக்கு மணற் சிற்பம் செய்துள்ளார்.

    • தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
    • கலைஞர் சுதர்சன் பட்நாயக் திருவள்ளுவரின் சிலை வடிவில் மணற்சிற்பமாக வரைந்து மரியாதை செலுத்தினார்.

    தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு, தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் புரி கடற்கரையில் திருவள்ளுவர் உருவத்தை மணற்சிற்பமாக வரைந்தார்.

    கலைஞர் சுதர்சன் பட்நாயக், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவரின் சிலை வடிவில் மணற்சிற்பமாக வரைந்து மரியாதை செலுத்தினார். அந்த மணற்சிற்பத்தில், "திருவள்ளுவருக்கு அஞ்சலி, பேரறிவுச் சிலை" என குறிப்பிட்டிருந்தார்.

    இதைதொரடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் தளத்தில் சுதர்சன் பட்நாயக்கின் பதிவை பகிர்ந்து நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

    அந்த பகிர்வுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " சிறுமதியாளர்கள் சுருக்க நினைத்தாலும் பேரறிவால் பொலிகிறார் அய்யன் வள்ளுவர்.

    மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

    கீழல்லார் கீழல் லவர்" என குறிப்பிட்டிருந்தார்.

    ×