search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sand sculpture"

    • பூரி கடற்கரையில் பார்வையாளர்களை கவரும் வகையில் மணல் சிற்பம் வடிவமைப்பு.
    • பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், இதை உருவாக்கி உள்ளார்.

    பூரி:

    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப்பண்ட், நேற்று காலை டெல்லி புறநகர் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ரிஷப் பண்ட் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட் விரைவாக குணமடைய வாழ்த்து தெரிவித்து ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், இதை உருவாக்கி உள்ளார்.

    கிரிக்கெட் பேட்டில் ரிஷப் பண்ட் உருவம் மணலால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் குணமடையுங்கள் ரிஷப் பண்ட் என அதில் எழுதப்பட்டுள்ளது. இந்த மணல் சிற்பத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பட்நாயக் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    • ஒடிசாவின் பூரி கடற்கரையில் 1,213 மண் தேநீர் கோப்பைகள் கொண்டு மணல் சிற்பம்.
    • தேநீர் விற்பனையாளர் முதல் நாட்டின் பிரதமர் வரையிலான பயணத்தைக் காட்ட மண் தேநீர் கோப்பைகளை பயன்படுத்தினோம்.

    பிரதமர் மோடி தனது 72-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு ஒடிசாவின் பூரி கடற்கரையில் பிரதமர் மோடியின் உருவப் படத்தை வித்தியாசமான முறையில் மணல் சிற்பமாக செதுக்கி இருக்கிறார் பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.

    அதன்படி, பட்நாயக் 1,213 தேநீர் கோப்பைகளை நிறுவி "ஹேப்பி பர்த்டே மோடி ஜி" என்ற வாழ்த்துடன் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

    இதுகுறித்து பட்நாயக் கூறுகையில், " பிரதமர் மோடியின் தேநீர் விற்பனையாளர் முதல் நாட்டின் பிரதமர் வரையிலான பயணத்தைக் காட்ட மண் தேநீர் கோப்பைகளை பயன்படுத்தி சிற்பம் உருவாக்கியுள்ளேன். இங்கே எனது கலையின் மூலம் பிரதமருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்" என்றார்.

    • ஒடிசா பூரி கடற்கரையில் மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் 125 மணல் ரதங்களை உருவாக்கியுள்ளார்.
    • ரத யாத்திரை திருநாளில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை இனி பயன்படுத்த வேண்டாம்.

    ஒடிசா மாநிலம் பூரியில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் யாத்திரை விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி தரப்பட்டதால் யாத்திரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

    பக்தர்களின் வெள்ளத்தில் அலங்கரிக்கப்பட்ட 3 ரதங்களில் ஜெகந்நாதர், தேவி சுபத்ரா, பாலபத்ரா வலம் வர உள்ளனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பூரி ஜெந்நாதர் யோயில் யாத்திரை திருவிழாவையொட்டி, ஒடிசா பூரி கடற்கரையில் மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் 125 மணல் ரதங்களை உருவாக்கியுள்ளார்.

    இதுகுறித்து சுதர்சன் பட்நாயக் கூறுகையில், " ஜெகநாதரின் புனித ரத யாத்திரையைக் குறிக்கும் வகையில் 125 மணல் ரதங்களை உருவாக்கியுள்ளோம். இது எங்களின் புதிய உலக சாதனையாக இருக்கும்.

    மேலும், இந்த ரத யாத்திரையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என்று குறிக்கும் வகையிலும் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.

    ×