என் மலர்
நீங்கள் தேடியது "Puri beach"
- இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின.
- இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின. இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில், இந்திய மகளிர் அணி உலகக்கோப்பையை வெல்ல வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணற்சிற்பம் உருவாக்கியுள்ளார்.

அவ்வகையில், கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு புரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் ஒரு மணற்சிற்பம் உருவாக்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். பண்டைய ஒடிசாவின் புகழ்பெற்ற கடல்வழிப் போக்குவரத்தை குறிக்கும் வகையில் படகு சிற்பம் உருவாக்கி உள்ளார். ஒடிசாவில் விரைவில் துவக்க உள்ள உலகக் கோப்பை ஹாக்கி தொடரை குறிக்கும் வகையில் அந்த படகில் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
அதனை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டரில் பதிவிட்டு, கார்த்திகா பூர்ணிமா வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு அனைவரையும் வரவேற்றுள்ளார். #SudarsanPattnaik #SandArt #HockeyWorldCup







