search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganesh"

    • ஊர்வலத்திற்கு அகில பாரத துறவியர் பேரவை இணை செயலாளர் சுவாமி ராகவானந்தா ஜீ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • கோவில் முன்பு இருந்து தொடங்கிய விநாயகர் ஊர்வலம் மெயின் ரோடு, திருவேங்கடம் சாலை, முக்கிய ரத வீதி வழியாக மீண்டும் கோவில் முன்பு சென்றடைந்தது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சங்கரன்கோவில் நகரில் உள்ள கோமதியாபுரம் தெருக்கள், லட்சுமியாபுரம் தெருக்கள், புதுமனை தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் அமைக்கப்பட்டிருந்த 25 விநாயகர் சிலைகளும், குருக்கள்பட்டி, பனவடலிசத்திரம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்ட 2 சிலைகளும், சங்கர நாராயணசாமி கோவில் முன்பு கொண்டு வரப்பட்டது.

    இதனை தொடர்ந்து நேற்று மாலை கோவில் முன்பு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு அகில பாரத துறவியர் பேரவை இணை செயலாளர் சுவாமி ராகவானந்தா ஜீ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்து முன்னணி தென்காசி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

    பாரதீய மஸ்தூர் சங்க மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் சிறப்புரையாற்றினார். தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க மாநிலத் துணை தலைவர் மாரிமுத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கோவில் முன்பு இருந்து தொடங்கிய விநாயகர் ஊர்வலம் மெயின் ரோடு, ராஜ பாளையம், திருவேங்கடம் சாலை, முக்கிய ரத வீதி வழியாக மீண்டும் கோவில் முன்பு சென்றடைந்தது.

    இந்த ஊர்வலத்தில் பா.ஜனதா மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், நகர பொதுச்செயலாளர் மணிகண்டன், நகர செயலாளர் சுப்பிரமணியன், இந்து முன்னணி நெல்லை கோட்ட அமைப்பாளர் ஆறுமுகச்சாமி, இந்து முன்னணி நகர பொருளாளர் குருச்சந்திரன், பொதுச் செயலாளர் விஜய் பாலாஜி, நகர செயலாளர்கள் சங்கர், மாரிமுத்து, இளைஞரணி செயலாளர் பாலகுமார் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • கடையம் உடையார் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் வரும் 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் பழமையும் புராணச் சிறப்பு கொண்டதாகும்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது உடையார் பிள்ளையார் ஆலயம். சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் பழமையும் புராணச் சிறப்பு கொண்டதாகும்.

    அகஸ்தியரால் வழிபடப் பட்ட பெருமையும் உடைய ஆலயமாகும். இந்த ஆலயத்திற்கு வருகிற 19-ந் தேதி ஞாயிற்றுக் கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.

    வெகு காலங்களுக்குப் பின்பு தற்போது தான் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கான கால் நாட்டுதல் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    100-க்கும் மேற்பட்டோர் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப்பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொள்கின்றனர்.

    கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடையார் சாம்பியன்ஸ் கிளப் நண்பர்கள் மற்றும் கீழக்கடையம் ஊர் பொது மக்கள் செய்து வருகின்றனர். 

    பசுமையை வலியுறுத்தும் வகையில் பிரபல மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் கடவுள் விநாயகரின் 20 அடி உருவம் பதிந்த மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். #SudarsanPattnaik #LordGanesh
    புவனேஷ்வர் :

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களிலும் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.
     
    இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியான இன்று பசுமையை வலியுறுத்தும் வகையில் பிரபல மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் கடவுள் விநாயகரின் 20 அடி உருவம் பதிந்த மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். 



    விநாயகரின் மணல் சிற்பத்தை வரைந்து அதன் கீழே பசுமையை காப்போம், பிளாஸ்டிக் குப்பைகளை வெல்வோம் எனவும் மண்ணில் எழுதியுள்ளார். 

    புரி கடற்கரையில் அவர் வரைந்துள்ள விநாயகரின் மணற்சிற்பம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. #SudarsanPattnaik #LordGanesh
    ×